India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமலஹாசன், பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனை முன்னிட்டு அவர் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என்.நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் தந்தை ரோவர் கல்வி, சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் துணைத்தலைவராக இருப்பவர் ஜான் அசோக் வரதராஜன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம், தகவல் தொடர்புத்துறை இணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை ராகுல்காந்தி ஒப்புதலுடன் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், மாநில பொதுச்செயலாளர் இவருக்கு நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது, பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் மக்களின் கனவு திட்டமான பெரம்பலூர் ரயில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
குன்னம், அசூர் கிழக்கு தெருவை, சேர்ந்த சூர்யா (20) இவர் ஓட்டுநர் வேலை செய்து வரும் நிலையில் டிப்பர் லாரியில் 4 ரோடு அருகில் உள்ள, சூர்யா ஏஜென்சில் ஜல்லி ஏற்றிக்கொண்டு ஆலம்பாடி நோக்கி சென்று கொண்டுள்ளார்.டிப்பர் லாரியை கவனக்குறைவாக ஒட்டி சென்றதால், எதிரே உள்ள தனியார் உணவு விடுதி முன்பு நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஜூனோஜா 31, என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் அன்மோல் ஜீனோஜா, தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், லாரி அருகில் இருந்த ஷேர் ஆட்டோவில் மோதி நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்லதுரை தலைமை வகித்தாா். இதில் பெரம்பலூா், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர களப்பணியில் ஈடுபடுவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. வெளியான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு , அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக வேட்பாளர் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி என 5 தேசிய/மாநில கட்சி வேட்பாளர் உட்பட 18 சுயேட்சை என மொத்தம் 23 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் போஸ் வெங்கட் ஏப்ரல் 3ஆம் தேதி பெரம்பலூரில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
துறைமங்கலம் 3ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் நிதியளிப்பு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கட்சி நிர்வாக்கள்தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ரமேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.