India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (ஜன.6) பெரம்பலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

கூகுளில் <

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க இங்குள்ள பழமையான இடங்களை நாம் காண்போம்
1. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2. இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3. கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4. பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை பகுதியை சேர்ந்த செழியன் (7) என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், அரையாண்டு விடுமுறை என்பதால் பெற்றோருடன் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து செழியன் உயிரிழந்தார். இதுகுறித்து அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற 3 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 2 வயது குழந்தை என 8 பேரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தெரு நாய்களை கட்டுபடுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற 3 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 2 வயது குழந்தை என 8 பேரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தெரு நாய்களை கட்டுபடுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.