India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் போஸ் வெங்கட் ஏப்ரல் 3ஆம் தேதி பெரம்பலூரில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
துறைமங்கலம் 3ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் நிதியளிப்பு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கட்சி நிர்வாக்கள்தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ரமேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர். இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர்.
மக்களவை தேர்தலை ஒட்டி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு இன்று(மார்ச் 29) வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வியாபாரி சங்கப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வரின் சாதனைகளை எடுத்துரைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவே தேர்தல் – 2024 அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சந்திரமோகன், பெரம்பலூர் தொகுதி முழுவதும் 29.03.2024 அன்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழிகாட்டுதலின் படி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மைய கட்டிடத்தில் வாக்கு பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் மையத்தை தெரிந்து கொள்ள சுவரில் சட்டமன்ற தொகுதி எண், பாகம் எண் எழுதும் பணி நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ள வெங்கனூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ரூ. 79,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் காரில் எடுத்து வந்த விஜயபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரிடமிருந்து அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் ரபியா, அப்துல் ஃபாரிக் ஆகியோருக்கு சொந்தமாக 70 ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(மார்ச் 26) மேச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றபோது 11 ஆடுகள் ஒன்றின் பின் ஒன்றாக மர்மமான முறையில் இறந்தன. இதனை அடுத்து ஆடுகள் உயிரிழந்தது குறித்து காரணத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.
Sorry, no posts matched your criteria.