India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட அசூர கிராமத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே நேற்று(ஏப்.4) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.3) காலை பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தணிக்கை குழுவினர் உடனடியாக ரூ.51,000 மதிப்பிலான 340 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அரசு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று(ஏப்.3) பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். எம்எல்ஏ, அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என தகவல்.
தேர்தலில் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் வானொலி திடலில் நிறைவுற்றது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று (ஏப்ரல் 2 ) மாலை 7 மணி அளவில் பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 அன்று நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உட்பட தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட 12 வகையான ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமலஹாசன், பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனை முன்னிட்டு அவர் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என்.நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் தந்தை ரோவர் கல்வி, சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் துணைத்தலைவராக இருப்பவர் ஜான் அசோக் வரதராஜன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம், தகவல் தொடர்புத்துறை இணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை ராகுல்காந்தி ஒப்புதலுடன் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், மாநில பொதுச்செயலாளர் இவருக்கு நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது, பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் மக்களின் கனவு திட்டமான பெரம்பலூர் ரயில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.