Perambalur

News January 18, 2026

பெரம்பலூர்: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

image

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.

News January 18, 2026

பெரம்பலூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

பெரம்பலூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 18, 2026

பெரம்பலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

image

ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வி (42), சங்கீதா (15) ஆகியோர் ஸ்கூட்டரில் அதே பகுதியில் உள்ள காட்டு கொட்டகைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய போது, எதிரே வந்த மூர்த்தி (30) என்பவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெரம்பலூரில் GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News January 18, 2026

பெரம்பலூர் மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ மொத்த பரப்பளவு – 1,757 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,675 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 82 சதுர கி.மீ
▶️ வருவாய் கோட்டம் – 1
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 152
▶️ கிரம பஞ்சாயத்து – 121
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 2
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News January 17, 2026

பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

image

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனுர் பகுதில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

பெரம்பலூர்: ரேஷன் கார்டில் எளிதாக மாற்றலாம்!

image

பெரம்பலூர் மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாற்றவும் அல்லது வேறு எண் சேர்க்கவும் இனி அரசு அலுவலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. சுலபமாக நீங்களே பண்ணலாம். அதற்கு.
1.<>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>
2.மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3.ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4.புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5.அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
6.மேலும் தகவல்களுக்கு: 1800-425-5901
இதை SHARE பண்ணுங்க.!

News January 17, 2026

பெரம்பலூர்: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

பெரம்பலூரும் பிரம்பின் வலிமையும்

image

பிரம்புக்கு பெயர் போன ஊர் பெரம்பலூர்.பெரம்பலூரில் கிடைக்கும் பிரம்பு போல் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது என்ற பெருமையும் உண்டு. பெரம்பலூர் மக்கள் செய்யும் பிரம்பு பொருட்கள் எத்தகைய வலிமை என்பது அனைத்து ஊரில் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள் கையிலும் தெரியும். அந்த பிரம்பின் பெயரை நமது ஊர் பெரம்பலூர் என பெயர் மாற காரணமாக அமைந்தது.பெரம்பலூர் வலிமை பற்றி தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 17, 2026

பெரம்பலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

பெரம்பலூர்: சட்டவிரோத மது விற்பனை செய்தவர் கைது

image

ஆலத்தூர் வட்டம், பாடலூர் டாஸ்மாக் கடையின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து பாடலூர் காவல் துறையினர் சோதனை நடத்திய போது ஆலம்பாடியைச் சேர்ந்த அனஞ்சி (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!