India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராம ஏரியில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9 ஆண்டுகளாக செஞ்சேரி ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறாத நிலையில் தற்போது ஏரியில் தண்ணீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த குரும்பலூர், பாளையம், ஆலம்பாடி, மேலப்புலியூர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.
பெரம்பலூர், சிறுவாச்சூர் இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று(மே 7) பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விரிவாக பேசினர். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் விசுவக்குடி அணை, விசுவக்குடி அருகில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை, 2,500 ஏக்கர் விவசாய பாசன வசதிக்காக 2015 இல் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் 41 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்கிறது. இந்த அணையின் நீர் திறப்பிற்கு பின், லாடபுரம் ஏரிக்கு சென்று பின் வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகாபாடி, மறவநத்தம் என சென்று கல்லாற்றின் வழியாக வெள்ளாற்றில் கலக்கிறது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல் நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து வெயில் வாட்டி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெப்பத்தில் இருந்து வாகனை ஓட்டிகளை பாதுகாக்கும் விதமாக பெரம்பலூர் காமராஜர் வளைவுப் பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் சார்பாகவும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 6வது இடம் பிடித்தது. இதில் பூலாம்பாடி, அனுக்கூர், நெற்குணம், ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், பேரளி, கவுல் பாளையம், எளம்பலூர், கீழமாத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும், இன்று(மே 7) ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று(மே 6) வெளியான நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 6,752 தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3342 மாணவர்களும், 3410 மாணவிகளும் ஆவர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.51% , மாணவியர்கள் தேர்ச்சி சதவீதம் 97.37%. மாணவிகளே இந்த வருடமும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் அவர்களுடைய விளைநிலங்களில் உற்பத்தி செய்த காய்கறிகளை பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு எடுத்து வருவதற்கு அரசு பேருந்துகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண்மை விற்பனை (ம) வணிகம் துறையால் அடையாள அட்டை வழங்கப்படுகிறது என உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் k.கமலி மற்றும் செனிதா என்ற இரண்டு மாணவிகளும் 593/600 முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சிவசுப்பிரமணியம் இனிப்பு வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.