India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர், சிறுவாச்சூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். 1000 வருடம் பழமையான இக்கோவிலில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்க தேர் உள்ளது. இக்கோவிலின் சிறப்பாக, நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், அரிசியை எடுத்து வந்து அதை கோவிலில் ஊரவைத்து, உரலில் இட்டு இடித்து மாவிளக்கேற்றுவர். இதற்கு உதவ ஆட்களும் உள்ளனர். பல புராணகால கதைகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.
பெரம்பலூர் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கான மத்திய அரசு திட்டத்தின் கீழ், கால்நடை நலன் நோய் கட்டுப்பாட்டு திட்டம் (LHDPC) மூலம் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று(24-4-2024) முதல் மே 23 வரை அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்காக 700 டோஸ் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முகாமினை பன்றி வளர்ப்போர் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குன்னம் வட்டம் மேலமாத்தூர் அருகே வரிசைபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ கல்வி குழுமத்தின் புதிய அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(ஏப்ரல் 24) மாலை பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் கல்விக் குழுமத்தில் நிர்வாக தலைவராக ராஜாராமன் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலராக ராம்பிரசாத் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் நிர்வாக அலுவலர்கள் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மத வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், பெரம்பலூரில் தலைமை அஞ்சலகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு கடிதத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர். இந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் (ஏப்ரல் 23) நேற்று சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமிக்கு ஆராதனை அபிஷேகங்கள் நடைபெற்று ஸ்ரீ காமாட்சி அம்மன் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசையுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். வழிபட்டனர் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14, 46, 352 வாக்காளர்கள் உள்ள நிலையில் 11,19, 881 பேர் மட்டும் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 77.43% சதவீதம் வாக்குப்பதிவு பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளில் 6 வது இடத்தை பெரம்பலூர் மக்களவை தொகுதி பெற்றுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நல்லேறு திருவிழா இன்று(ஏப்.23) நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க இயற்கையை வணங்கி வளர்ப்பு காளைகளுடன் பொன் ஏர் பூட்டி உழவுப் பணியை பாரம்பரிய முறைப்படி மேற்கொண்டனர். இதில் திரளாக கலந்து கொண்டாடினர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(ஏப்.22) காலை 10 மணி முதல் 5 மணி வரை உதிரம் நண்பர்கள் குழு, மாணவர்கள் சக்தி இயக்கம், திருச்சி சேவை கரங்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் கல்லூரி சாலை 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.