India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர், வல்லாபுரம் அருகே கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பெரம்பலூர் நெடுஞ்சாலை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஆறுபேரில் ஐந்து பேரை கைது செய்த போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குற்றவாளிகளையும் மாவட்ட மதுவிலக்கு பிரிவினரிடம் (கலால்)ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-25 ஆண்டுக்கான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேரடி 2ஆம் ஆண்டு முழுநேரம் தொழில் பயிற்சி உடன் கூடிய பட்டைய படிப்பிற்கான மாணவர்களின் சேர்க்கை விண்ணப்ப பதிவு மாணவர்கள் (20/5/2024) வரை https://tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் (அ) கீழக்கணவாய் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரில் விண்ணப்பிக்க வழிவகை செய்துள்ளது என தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் பெரம்பலூரில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கியது. அப்போது பேருந்துக்கு பின்னால் டூவீலரில் வந்த விசிக பிரமுகர் ரசித் அலி வழிவிடுமாறு கூறவே, அரசு பேருந்து நடத்துநர் ராஜேந்திரனுக்கும், ரசித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நடத்துநர் கையை ரசித் கடித்துள்ளார். நடத்துநர் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பெரம்பலூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வு வரும் 2024 ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்விற்கு (மே.16) இன்று முதல் ஜூலை 1 வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கல்வி வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், கிருஷ்ணாபுரத்தில் ரைஸ் மில் அதிபர் குழந்தைவேல், அவரது மகன் சக்திவேல் இடையேசொத்து தகராறு இருந்தது. இதனால் தந்தையை, மகன் தாக்கியுள்ளார்.இத்தாக்குதல் வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால்வி.களத்தூர் போலீஸார் சக்திவேலை சிறையில் அடைத்தனர். ஜாமின் கேட்டு சக்திவேல் நேற்று மனு தாக்கல் செய்தார் மனுவை தள்ளுபடி செய்து பெரம்பலூர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர், வேப்பந்தட்டை அருகில் உள்ள பச்சைமலை மீது அமைந்துள்ளது கோரையாறு அருவி. இந்த நீர்வீழ்ச்சியில், மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது. சிறிய அளவு மழை பெய்தாலும் இந்த அருவியில் நீர்கொட்டும். குறிப்பாக அக்டோபர் இறுதியிலிருந்து இதன் சீசன் ஆரம்பித்துவிடும். இந்த மழைநீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.
Sorry, no posts matched your criteria.