Perambalur

News May 31, 2024

பெரம்பலூர் இன்று மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்த கலெக்டர் அலுவலகம் 

image

பெரம்பலூரில் ஆண்டுதோறும் மே மாதம் 30-ஆம் தேதி சர்வதேச திசு பன்முக கடினமாதல் தினமாக அனுசரிக்கப்படுவது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச திசு பன்முக கடினமாதல் தினத்தை முன்னிட்டு மே.30ஆம் தேதி இரவு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது. இதை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.  

News May 31, 2024

சட்ட விழிப்புணர்வு முகாம்

image

ஆலத்தூர் வட்டம் கொட்டரை ஊராட்சியில் நேற்று பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட பணி ஆணை குழு மற்றும் பெரம்பலூர் சிவம் அறக்கட்டளையும் இணைந்து பொதுமக்களிடையே ஒருங்கிணைந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இம்முகாமில் வழக்கறிஞர்கள் சிவம் அறக்கட்டளையின் நிறுவனர் ஊராட்சி மன்ற தலைவர் ஆலத்தூர் வட்டம் சிவம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

News May 30, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, “தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவ கழிவுகள் என தரம் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் வாரம் ஒருமுறை கட்டாயம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார்.

News May 30, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் சதமடித்த வெயில்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஆங்காங்கே மழை பெய்து வந்த காரணத்தால் வெப்பநிலை குறைந்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் மே-30 ஆம் தேதியான இன்று வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்கீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

News May 29, 2024

காதலை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

image

ஆலத்தூர்: புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவருக்கு அதே ஊரைச் சார்ந்த 22 வயது வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தாய் கண்டித்ததால் மனம் உடைந்து சிறுமி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

News May 29, 2024

பெரம்பலூர்: விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) 20.6.2023-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று(மே 28) தகவல் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards. tn. gov. in 20.6.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

பெரம்பலூர் அருகே விபத்து

image

மணப்பாறையை சேர்ந்த பிரியதர்ஷினி (23) இவரது நண்பர் பெரம்பலூர், எறைய சமுத்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (23).
இந்நிலையில் பிரியதர்ஷினி திருச்சியில் இருந்து மணிகண்டன் டூவீலரில் பெரம்பலூருக்கு வந்தனர். அப்போது பாடாலூர் அருகே டூவீலரில் இருந்து பிரியதர்ஷினி
கீழே விழுந்தார். காயமடைந்த பிரியதர்ஷினியை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரணை.

News May 28, 2024

வாகன திருட்டில் தொடர்புடைய 2 பேர் கைது

image

பெரம்பலூர், எறையூர் பகுதியில் நடந்த ATM-ல் கொள்ளை முயற்சி (ம) 5 இருசக்கர வாகன திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டது கடலூர் மாவட்டம்
வளையமாதேவி மெயின் ரோடு பகுதி சேர்ந்த ஆகாஷ்(19), பெரம்பலூர், குன்னம் வட்டம், அத்தியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் மங்களமேடு போலீசார் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!