India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்சியரகத்தில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கையரும் பங்குபெற்று பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் நேற்று(ஜூன் 6)தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு மே மாதத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத பொருட்கள் வாங்கும்போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் நேற்று(ஜூன் 6) தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் கீதா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நிலத்தடி நீர் குறைவான இருக்கும் நிலையில் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்ப பயிர்களை தேர்வு செய்து பயன்பெறலாம். நீர் இன்மையால் பயிர்களை கருதுவதை தடுக்க குறைவான நீர் தேவையுள்ள பயிர்களை பயிர் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் அருண் நேரு வெற்றி பெற்றதை அடுத்து (ஜூன் 5) நேற்று நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N. நேரு, திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். மேலும், “பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி வருவது உறுதியாகிவிட்டது. இடம் பார்த்து தேர்வு செய்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். ரயில் போக்குவரத்து மற்ற திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். கடந்த ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அப்பள்ளி மாணவர் முகுந்தன் 635 மதிப்பெண்களும்ம், மாணவி நவீனா 566 மதிப்பெண்களும் பெற்றும் சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து கல்வி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான வரதராஜன் உட்பட தாளாளர், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமத்தூர் கிராமத்தைச் விக்ரமாதித்தன் தனியார் நிதி நிறுவனம் மூலம் 15.10.2020 அன்று 5,000 முன்பணம் செலுத்தி 12,900 கடன் பெற்று செல்போன் வாங்கி உள்ளார். மாதம் 1,456 வீதம் தனது வங்கி கணக்கில் இருந்து 7மாதம் கடனை திருப்பி செலுத்திய நிலையில், 14,770 கூடுதலாக பணம் பிடிக்கப்பட்டது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரூ.50,000+10,000 நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மின் கோட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பேரளி, ஆசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ் குடிக்காடு, கல்பாடி க.எறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் அருண் நேரு – 6,03,209 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் – 2,14,102 வாக்குகள்
*ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் – 1,61,866 வாக்குகள்
*நாதக வேட்பாளர் இரா.தேன்மொழி – 1,13,092 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.