Tamilnadu

News May 7, 2024

வேலூர் தலைமை ஆசிரியர்களை பாராட்டிய கலெக்டர்

image

வேலூர் மாவட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்ற 2 அரசு பள்ளி தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி இன்று (மே 7) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 7, 2024

குமரியில் மழை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அனேக இடங்களில் வரும் வியாழன் (மே-9) முதல் கோடை மழைக்காலம் துவங்க வாய்ப்பு உள்ளது. மேலும் தினசரி பிற்பகல் நேரத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

News May 7, 2024

நீலகிரியில் கர்நாடகா முதலமைச்சர்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காலை 11 மணிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலையில் வராமல் மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் வந்து இறங்கிய முதலமைச்சர் ஏவ்லாக் ரோட்டில் உள்ள தனியார் பங்களாவுக்கு சென்றார். இங்கு 5 நாட்கள் தங்கியிருந்து தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக தெரிகிறது.

News May 7, 2024

காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி.

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மாணவி ஒருவர் நுழைவுச்சீட்டை மறந்து விட்டு தேர்வு மையத்திற்கு வந்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவிக்கு அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கணேசன் உடனடியாக நுழைவு சீட்டை பதிவிறக்கி மாணவிக்கு தேர்வெழுத உதவி செய்தார். இச்செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் கணேசனை நேரில் அழைத்து பாராட்டினார்.

News May 7, 2024

மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

image

மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,“+2 முடித்து மேற்படிப்பு பயில்வோர்களை பொறியியல், நர்சிங், கலை (ம) அறிவியல், பாலிடெக்னிக் ஆகிய படிப்புகளில் தனியார் கல்லூரிகளில் நேரடியாக சேர்த்துவிடுகிறோம். கட்டணம் அனைத்தும் இலவசம், விடுதி கட்டணம் செலுத்தினால் போதும் என ஏமாற்றும் நோக்கில் ஆசை வார்த்தைகளை கூறும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்

News May 7, 2024

திருவாரூர்: மணல் திருடிய ஆறு பேர் கைது

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்கில் மணல் திருடிய கூத்தாநல்லூரை சேர்ந்த முரளிதாஸ், சரண்ராஜ், செங்குட்டுவன், தினேஷ் குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 7, 2024

மூன்று பாடங்களில் 100க்கு 100 எடுத்து மாணவி சாதனை

image

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவரது மகள் தரன்யா. இவர் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இவர் 600 க்கு
577 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் மூன்று பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.  

News May 7, 2024

கடலூர் அருகே எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

image

கல்வித் தரக் குறியீடுகளில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருந்தது. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்று எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக இன்று கடலூர் மாவட்டம் மிகச்சிறந்த முறையில் கல்வித்தர குறியீடுகளில் முன்னேற்றமடைந்திருக்கிறது என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News May 7, 2024

மதுபோதையில் இளைஞர் கொலை

image

தஞ்சாவூர், சாணூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். நேற்று இரவு (மே.6) புதிய பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மூன்று இளைஞர்களுக்கும் ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞர்கள் தாக்கியதில் ஹரிஹரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து மருத்துவகல்லூரி காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 7, 2024

திருவாரூர் கம்பீரமான தியாகராஜ சுவாமி கோயில்!

image

திருவாரூரிலுள்ள தியாகராஜ கோயில், சைவ மரபில் பெரிய கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்று அழைக்கப்படுகிறது. நாயன்மார்களால் பாடல் பாடப்பெற்ற இத்தலத்தில், உலகின் மிகப் பெரித் தேரான ஆழித்தேர் கொண்ட கோயிலாகும். இக்கோயிலில் பசுவிற்கு நீதி வழங்கினான் மனுநீதிச்சோழன். பழமையான புராணங்களை கொண்ட இத்தலம் 2000-3000 வருடங்களுக்கு முந்தையது. 9 ராஜகோபுரமும், 80 விமானமும், 12 மதிகள் கொண்ட கம்பீரமான தோற்றமுடையது.

error: Content is protected !!