India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அலுவலகப் பணிகள் காரணமாக அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்கள்
அஞ்சல் வாயிலாக தங்களது வாக்குகளை செலுத்தலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். படிவம் 12Dயை உரிய முறையில் பூர்த்தி செய்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் சமர்ப்பிக்கலாம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு 3 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வெள்ளலூர் நாடு அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் உள்ளூர்டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், திருச்சியில் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (மார்ச்.22) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொரடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொறுப்பாளர் டி.ஆர்.பி ராஜா, திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் பிரியாணி போடுவதாக சொல்லியுள்ளார்கள். அதுவும் மட்டன் பிரியாணி சுவையான ஆட்டு பிரியாணி என்றார்.
தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, குமரி, தூத்துக்குட்டி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடலூரில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மற்றும் காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.