India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தால் அக்னி வீர் வாயு தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர் மேன் தேர்வு மையத்தில் 3.7. 2024 முதல் 12.7.2024 வரை ஆள்சேர்ப்பு பேரணி நடத்தப்பட உள்ளது. எனவே, இதில் விருப்பமுள்ள திருச்சியைச் சேர்ந்த இசைப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் இசை கலைஞர்கள் www.agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் வரும் 5.6.2024ம் தேதிக்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
மதுரை அனுப்பானடி பாபு நகரை சேர்ந்தவர் திலகவதி(62). இவர் நேற்று காலையில் வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி திலகவதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு கையில் ஏந்திய படி கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூச்செரிதல் மற்றும்
காப்பு கட்டும் நிகழ்ச்சி
நடைபெற்றது .பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த நாயக்கர் பாளையத்தில் நேற்று(மே 31) அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய திருக்கோணம் ICLக்கு சுண்ணாம்புக்கல் குவாரியிலிருந்து அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வந்த 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பழனி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று (மே 31) நடைபெற்றது, விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு வாழ்த்தினார். உடன் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புகழுர் நகராட்சியில் உள்ள காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி ரம்யா (27) இவரது கணவர் கதிர்வேல் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திடீரென காலமானார். இதில் விரக்தியில் மன உடைந்து காணப்பட்ட ரம்யா அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரம்யாவின் தாயார் வீரம்மாள் வேலாயுதம்பாளையம் போலிஸில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று (மே 31) வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி மாணவர்கள், பல் மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் நல்லூர் காவல்துறையினர் நேற்று காசிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஜன் குமார் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மாநகரம் முழுவதும் தனிப்படையினர் கஞ்சா தடுப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
பணி நிறைவு பெற்ற தமிழக உளவுத்துறை ஐஜி கண்ணப்பன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (மே 31) நெல்லைக்கு வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்தனர். பின்னர் ஐஜி கண்ணப்பன் உடன் பல்வேறு ஆலோசனைகளை பத்திரிகையாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிகழ்வின்போது மாநகர பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் தொடர்ந்து கோடை மழை கொட்டியது. ஏற்காடு சேர்வராயன் மலையில் பெய்த பலத்த மழையால் வனப்பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடி தாவரங்கள் துளிர்த்து தழைத்து, பச்சைப் பசேலென கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர் பசுந்தீவனம் கிடைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.