Tamilnadu

News January 2, 2026

பெரம்பலூரில் இவ்வளவு பழமையான இடங்களா?

image

பெரம்பலூர் மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோவில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து நமது ஊரின் பெருமையை தெரியப்படுத்துங்க…

News January 2, 2026

மதுரை: பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் பரிதாப பலி

image

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் பாலமுருகன்(31). மது போதைக்கு அடிமையான இவர் எப்போதும் மது மயக்கத்திலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டு பாத்ரூமிற்கு சென்றவர் அங்கு தடுமாறி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

சேலத்தில் இளம் பெண் விபரீத முடிவு!

image

சேலம், கருப்பூரைச் சேர்ந்தவர் கௌசல்யா (28). இவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே கௌசல்யா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வலி அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

News January 2, 2026

சேலத்தில் இளம் பெண் விபரீத முடிவு!

image

சேலம், கருப்பூரைச் சேர்ந்தவர் கௌசல்யா (28). இவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே கௌசல்யா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வலி அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

News January 2, 2026

குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

image

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

image

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

தேனி: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

image

கம்பம் பகுதியில் உள்ள தனியார் மஹால் அருகே நேற்று (ஜன.1) 54 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

திருவாரூர் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் தெற்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-க்கான பண்டிகை காலங்களில் வெளியூரில் வசிப்பவர்களுக்கு ஏதுவாக வெளியூரிலிருது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக திருவாரூர் தெற்கு ரயில்வே துறையின் சார்பில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயணம் செய்ய ரயில்வே துறை அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

நீலகிரியில் அதிரடி ரத்து!

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பொழியுமென அறிவித்திருந்தது, அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அதிகபட்சமாக 26 செ.மீ மழை பதிவாகி கனமழை பொழிந்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தென்னக ரயில்வே மேட்டுப்பாளையம் -உதகை மலை ரயில் சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News January 2, 2026

செங்கை ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!