India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் இத்திட்டத்தின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது. திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கோரிப்பாளையம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்றம் வழியாக ஒத்தக்கடை வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் அடையாறு – பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கரு.நாகராஜன் உடனிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.எல்.விஜயன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனு தாக்கல் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேனி தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், இன்று (மார்.25) தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நபராக சுயேச்சை வேட்பாளர் ஆதிமுத்துக்குமார் தனது ஆதரவாளர்களுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசன் இன்று (25.3.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி நாளை (மார்ச் 026) காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடியில் மீண்டும் 2வது முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இன்று காலை அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே, தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து
சேலம் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பயிலும் 22089 மாணவர்கள், 21181 மாணவிகள் என மொத்தம் 43270 பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 184 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் இழுப்பறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது ராப்ர்ட் புரூஸ் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை, கன்னியாகுமரி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்., சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிடுவதாக சன்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் சேவகி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.