India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் இன்று (03.01.2026) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, ஆவடி காமராஜ் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமருத்துவம், எலும்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி-2 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.02) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 274 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டங்களின் வரவு–செலவு கணக்குகளுக்கான 26வது சுற்று சமூக தணிக்கை நாளை (ஜன.03) நடைபெற உள்ளது. இதற்காக நரப்பாக்கம், விஷார், வல்லம் உள்ளிட்ட 16 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இன்று ஆங்கில புத்தாண்டு விடுமுறையிலும் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பள்ளியில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை பள்ளியிலிருந்து போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஜன.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை முகாமில், மேற்கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் 29 ஜூன் 2015 முதல் 31 டிசம்பர் 2025 வரை மொத்தம் 46,73,41,480 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 11,19,80,687 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொதுப் போக்குவரத்தில் மெட்ரோவை உயிர்நாடியாக ஏற்றுக்கொண்ட பயணிகளுக்கு நன்றி தெரிவித்து, இனிய புத்தாண்டு 2026 வாழ்த்துக்களையும் CMRL தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் புத்த மதத்தினர் சமயநர்கள் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையுருக்கான நலத்திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாட இருக்கிறது. இதனை வருகின்ற ஜன.08 மாலை 4.00 மணிக்கு மா.ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. என ஆட்சியர் இன்று அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.