India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 383 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மூலமும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை (ஜூன்.10) பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் தேனியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி துறை சார்பில் வருமான வரி செலுத்துவது சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் குமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் அமைந்துள்ள ஒய் ஆர் மஹால் திருமண மண்டபத்தில் ஜூன்-11 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தொழில், வணிக துறையினரிடம் வருமான வரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வருமான வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் உதயமாா்த்தாண்டம் சாமிக்கால்விளையைச் சோ்ந்தவர் ரமேஷ்குமாா் (40). கட்டடத் தொழிலாளியான இவா் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி பெட்ரோல் நிலையம் அருகே பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நேற்று நடைபெற்றது. இதில்மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவ பொம்மையின் தொடை பகுதியை பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா் கதாயுதத்தால் தாக்கி பிளக்கும் காட்சி நடித்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் அடுத்த மோட்டு கொல்லை பகுதியில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபர்ரனர். அப்போது ஷபியுல்லா என்பவர் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 22 பாக்கெட். பான் மசாலா 27 பாக்கெட் வைத்திருந்ததாக ஷபியுல்லா மீது நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனிஅரசமரத்து தெருவை சேர்ந்த முத்துசாமி கொலை வழக்கில் இவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவா் கடந்த 2013ஆம் ஆண்டு கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். முத்துசாமிக்கு வெள்ளிக்கிழமை இரவு மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக தெரிகிறது.இதனால் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.
அங்கு அவா் உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (50). இவருக்கும் இவரது உறவினர் சீனிவாசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு வெங்கடேஷ் ஆணுறுப்பை சீனிவாசன் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீனிவாசனை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, பெரியாா் நகரில் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில் புதிய யோகா வகுப்புகள் நாளை (10ஆம் தேதி) தொடங்கவுள்ளது. நாளை முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஆண்களுக்கும், காலை 10.30 மணி முதல் 12.30 மணி பெண்களுக்கும் யோகா வகுப்பு நடைபெற உள்ளது என ஈரோடு மனவளக்கலை மன்ற நிா்வாக அலுவலா் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(10) முதல் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்க உள்ளது. இதில் அனைத்து ஊரக கிராம பகுதிகளிலும் இம்மாதம் 30 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளதால் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்யாறு, நெடும்பிறை கிராமத்தில் உள்ள குளத்தில் விடுமுறை தினமான இன்று ஐந்து சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில் நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்த பரத் குமார், சந்தோஷ் குமார் மற்றும் செய்யாறு நகரைச் சேர்ந்த சாய்சரண் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.