Tamilnadu

News March 28, 2024

கோடை காலத்தில் கடைபிடிக்க வழிமுறைகள் 

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பம் இருந்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கலெக்டர் கீழ்க்கண்ட விழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். இதில், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

ஈரோடு 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு திண்டல் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 28, 2024

காஞ்சிபுரம்: தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க..!

image

காஞ்சிபுரத்தில், மக்களவை தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை கலெக்டர் கலைசெல்வி மோகன் நேற்று(மார்ச் 27) வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் தொகுதி பொது பார்வையாளர் புபேந்திர எஸ்.சௌத்ரி: 75488 81882;

காஞ்சிபுரம் தொகுதி காவல் பார்வையாளர் பாரத் ரெட்டி: 63855 15308;

காஞ்சிபுரம் தொகுதி செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ்: 72005 – 55395.

News March 28, 2024

செங்கல்பட்டில் துணை ராணுவ அணிவகுப்பு

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் நேற்று (மார்ச்.27) நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். இந்த அணிவகுப்பு மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாச்சலநகர் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவு பெற்றது. 

News March 28, 2024

தேர்தல் விதியை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்கு

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25ஆம் தேதி பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ் கனி, திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 28, 2024

பால்காரா் மீது தாக்குதல் இருவர் கைது

image

வெம்பாக்கம் அருகே ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பால்காரா் பிரபு. இவரது மனைவி தமயந்தி சில தினங்களுக்கு முன்பு வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தின் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் ஓட்டி வந்த சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரகாசம் அளித்த புகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஜினிகாந்த், அவரது மகன்கள் சக்திவேல், அபிஷேகை கைது செய்துள்ளனர்.

News March 28, 2024

திருப்பத்தூர் அருகே சோகம்

image

அரக்கோணம் ரயில்வே போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (33). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். நேற்று வேலை காரணமாக ரயிலில் சென்று ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2024

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை.

image

தில்லைவிளாகம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று. இதில் சுமாா் 102 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நாளை (மாா்ச்.29) நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது.

News March 28, 2024

ஆன்லைனில் ப‌ண‌ மோச‌டி: 7 பேர் கைது

image

டைக்கானலுக்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு இன்ப‌ சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தைகள் கூறி ப‌ரிசு கூப்பன்களை காட்டி கூப்ப‌ன்க‌ளில் ப‌ரிசு விழுந்தால் வ‌ருட‌த்திற்கு 7 நாட்கள் வீத‌ம் 10 வ‌ருட‌த்திற்கு 70 நாட்க‌ள் உல‌க‌த்தில் எந்த‌ மூலையில் வேண்டுமானாலும் த‌ங்க‌லாம் என‌ கூறி ஆன்லைனில் ரூ. 350000 மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேரை கைது செய்துள்ளனர்.

News March 28, 2024

795 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 23 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 795 அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு காரணம் கேட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 2 நாட்களில் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!