India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது, காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற பொது தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை சட்டவிரோதமாக முடக்கிய பாஜக அரசை கண்டித்து, பதாகை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் ஸ்கூல் சொசைட்டி அருகில் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவர் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து கண்டறிந்து அதற்கான தீர்வு காண வழிவகுப்பேன் என்று உறுதி கூறினார்.
நாமக்கல் இரத்தினசாமி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்பள்ளி நாடு ஊராட்சி மன்றம் சார்பாக மகளிர்களுக்கு இலவச தையற் பயிற்சி வழங்கப்பட்டது பயிற்சியை சிறப்பாக மகளிர்களுக்கு நடத்தி கொடுத்த எப்சிபா குளோரியை பாராட்டி நாமக்கல் ரோட்டரி சங்கம் சார்பாக இலவசமாக தையல் இயந்திரத்தை மாவட்ட தலைவர் விஸ்வநாதன் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளின் சார்பில் சண்முக சுந்தர் ராஜா பள்ளியின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான ஆவணத்தை தருமபுரம் ஆதீனத்திடம் இன்று வழங்கினார்.
கடலூருக்கு இன்று மாலை அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி வருவதை அடுத்து கடலூர் அண்ணா மேம்பாலம் தொடங்கி மைதானம் வரை அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு முறையான அனுமதி வாங்கவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கடலூர் பகுதியில் இருந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வைத்ததில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தங்களுக்கு புது வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள 2 வெடி மருந்துகளை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். 3 வீடுகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொளாகி உள்ளது.
அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுப்பது போல் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில், இந்த வீடியோ ஜூலை 2023-க்கு உரியது என்றும், எனவே தேர்தல் விதிமுறைகளின் வரம்பிற்குள் வராது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் போஸ் வெங்கட் ஏப்ரல் 3ஆம் தேதி பெரம்பலூரில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல் குறித்து வியாழக்கிழமை(மார்ச்.28)மட்டும் 51 விதிமீறல் புகாா்கள் வந்துள்ளன. கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்ணுக்கு 34 புகாா்களும, சிவிஜில் செயலி மூலம் 17 புகாா்கள் என மொத்தம் 51 புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினா்.
தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடி, ராவுசாப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.