India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தேர்தல் அலுவலர் சாரு ஸ்ரீ பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட பலர் இருந்தனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி நேற்று 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.
சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இடத்தை பொறுத்து ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை விற்பனை நடக்கிறது. தேர்தல் காரணமாக வழக்கத்தை விட 30 % கூடுதலாக விற்பனையாகி வரும் நிலையில், ஒரு தனி நபருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் மதுபானங்களை விற்கக் கூடாது என இன்று(ஏப்.1) சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரை சேர்ந்த போக்குவரத்து துறை ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் சிட்டிபாபு வீட்டில் கடந்த 28ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை, ரூ.2 லட்சம், 2 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் (24) என்பவரை நேற்று கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.
விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டுச்செல்லும் அரசு பேருந்துகளில் தற்போது, ‘ஆன்லைன்’ வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்புதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி இன்று உப்பளம் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
சின்ன மணிக்கூண்டு அருகே பிரச்சாரத்தில் ரங்கசாமி உரையாற்றிய போது அவரிடம் முதியோர் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குமாறு 75 வயதான மூதாட்டி ஒருவர் கண்கலங்கி பேசி கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, “அரசு சரியான நேரத்தில் முதியோர் பென்சனை உயர்த்தும்” என முதல்வர் கூறினார்.
பிரபல சினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீ தேவிக்கும் சரண்யாவுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரின் மீது ஸ்ரீதேவி கார் உரசியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் பகுதியில் பல்லடம் முதல் வெள்ளகோவில் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இருவழிச் சாலையாக உள்ள இதை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பணி தாமதமாவதாலும், எச்சரிக்கை பலகை வைக்காததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (40), இவரது மனைவி கஸ்தூரி (29). இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கஸ்தூரி கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் வரதட்சணை கேட்டு வேணுகோபால் தனது மனைவியை அடித்துள்ளார். இது குறித்து கஸ்தூரி குடியாத்தம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து வேணுகோபாலை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.