Tamilnadu

News April 2, 2024

கூத்தாநல்லூரில் திருடிய நபர் கைது

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கடைவீதியில் உள்ள கடை ஒன்றில் எச்பி மோட்டார் திருடப்பட்டதாக கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு  லட்சுமாங்குடி மேல தெருவை சேர்ந்த கண்ணையன் என்பவரது மகன் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு கடிதம்

image

நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை-2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி அகரகொந்தகை கிராமத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், கையெழுத்திட்ட நேர்முக கடிதத்தை அஞ்சலில் அனுப்பி வைக்க வருவாய் கோட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைத்தார்.

News April 2, 2024

உண்மையை மறைத்தவருக்கு அபராதம் விதித்த ஐகோர்ட்

image

மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

வேலூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.66 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

நெல்லையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பாளையில் வெப்ப அளவு 99.68°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

திருவள்ளூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) திருத்தணியில் வெப்ப அளவு 100°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

லாரி மோதி மின் கம்பம் உடைந்தது

image

ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது நேற்று இரவு அவ்வழியே வந்த லாரி மின்கம்பத்தின் மீது மோதியதில் பலத்த சேதம் அடைந்த மின்கம்பம் உடைந்தது. இதனால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்விநியோகம் பாதித்தது.

News April 2, 2024

வாலிபரை அவதூறாக பேசி தாக்கியவர் கைது

image

மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவரை அதே ஊரைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் அவதூறாக பேசி மிரட்டிய தாக்கினார். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் படி மானூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆனந்தராஜை தாக்கிய முருகனை இன்று (ஏப்ரல் 1 ) கைது செய்தார்.

News April 2, 2024

தாழையூத்து: டிடிவி தினகரன் வேண்டுகோள்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல்1) இரவு தாழையூத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்தவேனில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசினர். அப்போது அவர், அ.ம.மு.க. தொண்டர்கள் நயினர் நரேந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News April 2, 2024

காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

image

ஆற்காடு பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை விளக்கி அதன் கூட்டணியை சார்ந்த திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!