India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் அருகே பசுமை நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் செண்டர் நடத்தி அதில் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து வந்தது அம்பலமானது. அங்கு சென்ற போலீசார் ஸ்கேன் செண்டரில் பணியாற்றிய ஐயப்பனை கைது செய்து இடைத்தரகர் மற்றும் உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மதினா நகர் அருகே, ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார், இளங்கோவன் உள்ளிட்டோர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் சதீஷ்குமார் மது பாட்டிலை உடைத்து அப்பகுதியில் வீசியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ், அசாருதீன், அன்வாஸ் முகைதீன், அபிபூர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டு இருவரையும் தாக்கியுள்ளனர். இப்புகாரின் பேரில் போலீசார் 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே செங்குளத்தில் வசிக்கும் ரௌடி முத்தையா, சோழவந்தான் அருகே மேலக்காலில் நிகழ்ச்சிக்கு சென்றபோது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்தையா தனது நண்பர்களுடன், சித்தார்த்தை சந்திக்க சென்ற போது, மீண்டும் மோதல் ஏற்பட்டு முத்தையா குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கூடலூர், ஶ்ரீமதுரை அருகே மண்வயல் பகுதி கிராமங்களில் இன்று கூடலூர் ஒன்றிய திமுக செயலாளர் அ.லியாக்கத் அலி தலைமையில் திமுகவினர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் கங்காதரன், பிரதீஸ், மற்றும் பாக முகவர்கள் தேவசியா, பிரின்ஸ், மனோஜ், ராஜ்குமார், பாபு, ஆஷா , மணி, ஜோசப், அனில் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம், திருவாலங்காடு ஊராட்சியில் நேற்று மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதாவை ஆதரித்து கைச்சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் குத்தாலம் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தில் கள்ள சாராய விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று சின்னசேலம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அதே கிராமத்தைச் சேர்ந்த அமராவதி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே சாலை விபத்தில் நேற்று ஒருவர் பலி அரிமளத்தில் மொபட் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் மொபட்டில் வந்த சத்திரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (45). இவர் வாகன விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடைக்காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் நீர் நிலைகளிலும் நீரின் அளவு குறைந்துள்ளது.கோடை வெயிலிலும் குறைந்த அளவு ஓரமாக கொட்டி வரும் குற்றால அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று முதல் வருகை தர உள்ளனர். இவர்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையிலும் பதட்டமான வாக்கு சாவடியில் கண்காணிக்க உள்ளனர் இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.
Sorry, no posts matched your criteria.