Tamilnadu

News April 2, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

கோவில்பட்டி விநாயகர் நகரை சேர்ந்த நில புரோக்கர் துரை. நேற்று இவர் எட்டையாபுரம் குமார கிரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

நாடார் சங்க நிர்வாகிகளை சந்தித்த கனிமொழி எம்பி

image

திருநெல்வேலி எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருசை ஆதரித்து திருநெல்வேலி தட்சின மாற நாடார் சங்க நிர்வாகிகளிடம் தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) ஆதரவு கேட்டு கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் சங்க நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல், நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், வணிகர்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசை அகற்றுவதற்கான தேர்தல் ஆகும் என்றார்.

News April 2, 2024

கிருஷ்ணகிரியில் விதிமீறல்: பணம் பறிமுதல்

image

ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கு கல்மேட்டில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சாந்தகுமாரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் உரிய ஆவணமின்றி ஆட்டு வியாபாரி சங்கர் என்பவர் எடுத்துச் சென்ற 1,29,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரகத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

News April 2, 2024

நீலகிரி கலெக்டர் அதிரடி அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீலகிரியில் தற்போது 57 பறக்கும் படை குழுக்கள் இயங்கி வருகின்றன. தேர்தல் பார்வையாளர் கிரண் அறிவுறுத்தலின்படி, தீவிரமாக கண்காணிக்க பறக்கும்படை குழுவின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

போக்குவரத்துக்கு இடையூறு: 20 வாகனங்களுக்கு அபராதம்

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் விஜய், லூா்து பிரவீன் உள்ளிட்டோா் நேற்று(ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருள்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

News April 2, 2024

ராம்நாடு: கூட்டு பாலியல் வழக்கில் 5 பேர் ஆஜர்

image

பரமக்குடியில் 9ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது, தரகர்கள் உமா, கயல்விழி ஆகியோரை கைதுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் கூடுதல் மகளிர் கோர்ட்டில் 5 பேரும் நேற்று ஆஜரான நிலையில் வரும் 8ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

News April 2, 2024

மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்த நாம் தமிழர்

image

நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கார்த்திகா இன்று செருதூர் மீனவ கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு மீன் விற்பனை செய்யும் பெண்களுடன் அமர்ந்து மீன் விற்பனை செய்தும், மீன்களை சுத்தம் செய்தும் வாக்கு சேகரித்தார். அவருடன் அக்கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் உட்பட பலர் இருந்தனர்.

News April 2, 2024

ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் 

image

செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் அருகே தேரடி தெருவில் வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ரகசியமாக வீட்டில் மதுபானம் விற்ற சுலோச்சனா (65) என்பவரை நேற்று (ஏப்-1) கைது செய்து அவரிடமிருந்த ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

மயிலாடுதுறையில் நூதன முறையில் பிரச்சாரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிகளில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பாமக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொறையார் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த போது காய்கறி கடையில் தானே காய்கறிகள் விற்பனை செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 2, 2024

புதுவை சிறப்பு எஸ்எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

image

புதுவை, பாகூரைச் சேர்ந்த சரவணன்( 56). போக்குவரத்து காவல் சிறப்பு எஸ்எஸ்ஐ-ஆக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 5 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டின் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாகூர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!