India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் நீலன் அசோகன் தந்தையும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவரும் கல்வியாளருமான உ.நீலன் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இறுதி ஊர்வலம் நாளை 3ந்தேதி மாலை 5மணியளவில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மறைந்த உ.நீலன் உடலுக்கு காங்கிரசார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மக்கள் செலுத்தினர்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் பதிவாகி வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) அதிகபட்ச வெயிலாக இன்று 104.1°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் மற்றும் புகார்கள் குறித்தும், பொதுமக்கள் 1800 425 7036 என்ற கட்டணமில்லா இலவச எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது Cvigil செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
நாகை தொகுதியில் தேர்தல் செலவு கணக்குகளை செலவின பார்வையாளர் குழு கண்காணித்து வருகிறது.
வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை தனி வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை வரும் 8, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு விமானம் மூலம் வரும் ஏப்.4ல் வருகை தரும் அமித்ஷா, தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 6.00 மணிக்கு மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் இராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். ஏப்.5ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களின் மௌன நாடக நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோருக்கு இனோவா கார், தங்க செயின் பரிசு என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நகர செயலாளருக்கு இனோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 பவுன் நகையும் வழங்குவேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக தகவல்.
போளூரில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று போளூர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை செய்தார். இதில் ஏராளமான தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, இன்று(ஏப்.2) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்; தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது அல்ல; அதையும் தாண்டி புனிதமானது என பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கடலூர் திமுக கட்சியா அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரஸ்வதி வேலுச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.