Tamilnadu

News April 16, 2024

தேனி: தபால் வாக்குப்பதிவு

image

தேனி மக்களவை தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

News April 16, 2024

நாகையில் திடீர் மின்வெட்டு-மக்கள் அவதி

image

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பாரதி மார்க்கெட் அருகே மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட ட்ரான்ஸ்பார்மில் ஓவர் லோடு காரணமாக இன்று திடீர் மின்வெட்டு ஏற்பட்டது‌. இதனால் இந்த பகுதியைச் சுற்றியுள்ள அரியபத்திரப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். உடனடியாக தகவறித்து வந்த மின்வாரியத்துறையினர் விரைந்து பழுதை நீக்கியதால் மீண்டும் மின் விநியோகம் சீரானது.

News April 16, 2024

சிவகங்கை: கார்த்திக் சிதம்பரம் மனைவி வழக்கு பதிவு

image

கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி இன்று மானாமதுரை காந்தி சிலை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வாங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. மானாமதுரையில் நகராட்சியில் உள்ள வார்டுகளில் கார்த்திக் சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News April 16, 2024

சேலத்தில் இதுவரை ரூ.2.73 கோடி!

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாளே உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடியே 73 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் இரு திசைகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் கண்காணிப்பு குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

News April 16, 2024

திருச்சி: நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

மருங்காபுரி அடுத்த பளுவஞ்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26). இவர் இன்று நள்ளிரவு 1 மணியளவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 16, 2024

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

image

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் வணிகர்களுக்கான கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் ஏப் 19ல் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் உள்ளிட்ட அதிகாரிகள் வணிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

சேலம்: பதற்றமான இடத்தில் பலத்த பாதுகாப்பு

image

சேலம் மற்றும் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 12 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News April 16, 2024

ஈரோடு: அனைத்தும் தயார்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

தூத்துக்குடி அருகே 7 பேர் கைது

image

தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் ஆதித்யா, அஜய். இவர்கள் நேற்று முன்தினம் அருண்குமார் என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் அருண்குமார் உட்பட ஏழு பேர் அரிவாளால் ஆதித்யா, அஜய் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

News April 16, 2024

தி.மலை அருகே விபத்து; பலி

image

போளூர் அடுத்த கேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவர் உடல் நலக்குறைவால் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது, தச்சாம்பாடி பேருந்து நிலையம் அருகே குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!