India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (16.04.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
ஈரோட்டில் இன்று கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலின் கதாநாயகன் உதயநிதி தான். அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த தேர்தலோடு மோடி அண்ணாமலை போன்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தில் பழைய வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
டிரைவர் சம்பளம், இறக்கு கூலி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த 3ஆம் தேதி முதல் கேஸ் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முதல் மதுரை, துாத்துக்குடி பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், ஏழு பிளான்ட்களில் இயங்கி வந்த, 500 லாரிகளை நிறுத்தியதால், மதுரை, துாத்துக்குடி, ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் காஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிங்கிகுளம் கிராமத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று (ஏப். 16) தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். திடியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிங்கிகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தினர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது இதனால், நாளை முதல் 19 ஆம் தேதி வரை அரசு மதுபான கடைக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதனால் ஊழியர்கள் 3 நாள் தொடர் விடுமுறை மேலும் டாஸ்மார்க் விடுமுறை போது கள்ள சந்தையில் சாராயம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மருத்துவர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார்.தொகுதி முழுக்க தீவிர பிரச்சார மேற்கொண்டு வருகிறார்.அவருக்கு ஆதரவாக பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராம்குமார் நாமக்கல் சட்டமன்ற தொகுதி புதுச்சத்திரம் ஒன்றியத்தில் பாஜக கொடியை கையில் ஏந்தியவாறு இருசக்கர வாகனம் பேரணி நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், தேர்தல் பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடியில் இன்று (ஏப்ரல் 16) பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தாசில்தார் பலராமன் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே சேலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.15) 103.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மதிய நேரத்தில் வெப்பத்தை தவிர்க்க பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.