India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பரமக்குடி தொகுதிக்கு 303 வாக்குப்பதிவு மையங்களும், திருவாடானைக்கு 347, ராமநாதபுரத்திற்கு 338, முதுகுளத்தூரில் 386 மையங்களும் என மொத்தம் 1,374 வாக்குப்பதிவு மையங்களுக்கும், ஒரு மையத்திற்கு வாக்குப்பதிவு மைய அலுவலர், வாக்குப்பதிவு நிலை அலுவலர் என்று 5,614 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பணியில் மாவட்ட SP கிரண் ஸ்ருதி தலைமையில் 3 கூடுதல் SP மேற்பார்வையில், 6 துணை SP, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட 986 காவல்துறையினரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 282 TSP காவலர்களும், 413 ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆயுதப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஊர்க்காவல் படைவீரர்கள் என மொத்தம் 2700 பேர் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மாவட்டம் முழுவதும் 17 அதிவிரைவு படையினர், 16 விரைவு நடவடிக்கை குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 90 பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை வாகனங்களில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த லாரி பின்பக்கமாக வரும்போது சுவரில் இடித்ததால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு ஏற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனையை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராதாபுரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை பாளையில் வைத்து செய்தியாளர்களை இன்று (ஏப். 18) சந்தித்தார். அப்போது, தமிழக அரசின் உளவுத்துறை அதிமுக கட்சியினரின் டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்டு ஆளும் திமுக அரசு முதல்வருக்கு தகவல் அளிப்பதாக புகார் மனு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. இது மனித சுதந்திரத்திற்கு எதிரானது என கூறினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருவாரூர் 2024 பாராளுமன்ற தேர்தல் நாளை ( 19.04.24) வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வாக்காளர்களுக்கு திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாருஸ்ரீ ‘நாங்க Ready! நீங்க Readiys?” . என அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 1357 வாக்குச்சாவடி மையங்களில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் அடங்கிய 1642 நபர்கள் என மொத்தமாக 2206 நபர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.