India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுதலைப் போராட்ட வீரர் இராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 264வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி தலைமையில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பா.ஜெயப் பெருமாள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐஐஎம்) 12ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, ஐஐஎம் திருச்சியின் தலைவர் ஜலஜ் தானி தலைமை வகித்தார். இதில், இந்திய எரிவாயு ஆணையத் தலைவர் சந்திப் குமார் குப்தா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். அப்போது, இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறும் நீங்கள் அனைவரும் சவால்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 23வது வார்டு பகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமையில் நகர செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரால் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டது. இதனால் சிதம்பரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜன் தாங்கள் ஊராட்சியில் அமைந்துள்ள தளவாய்க் குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வார மாட்டு சந்தை நடைபெற்று வருகின்றது. இதில் விவசாயிகள் தங்களுடைய மாடுகளை நேரடியாக விற்பனை செய்தும் வாங்கியும் செல்கின்றனர். இதில் ஆடு,கோழிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி சிறப்பு திருப்பலியில் வழிபாடு நடத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அசோக் குமார் கார்க் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
நாட்டறம்பள்ளி அடுத்த வள்ளியூர் கிராமத்தில் கருணாமூர்த்தி என்பவரது குடியிருப்பு வீட்டில் பாம்பு இருப்பதாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
Sorry, no posts matched your criteria.