India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு பெட்டி இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் குரும்பட்டி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி தர்மபுரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ,மாவட்ட ஆட்சியருமான சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ராமசுப்புக்கு மாநில காங்கிரஸ் தலைமை முக்கிய கூடுதல் பொறுப்பை வழங்கி உள்ளது. இவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் கட்சி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் இல்லத்தில், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக முதுநகர் வஸந்தராயன் பாளையம் பகுதியில் இருந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்று வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளனவா என மருத்துவ குழு பரிசோதனை செய்தனர்.
இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் அனைவரது வீட்டிலும் பூத் ஸ்லிப் ஊழியர்கள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலூர் திருவாதவூரை சேர்ந்தவர் வெங்கடேசன், மகன் ஹரிஷ் பாண்டி(18). பிளஸ் டூ மாணவரான இவர் தேர்வு எழுதிய நாளில் இருந்து தேர்வு முடிவை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஒரு மணி அளவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தேர்தல் அலுவலர் சாரு ஸ்ரீ பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட பலர் இருந்தனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது. அதன்படி நேற்று 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.
Sorry, no posts matched your criteria.