India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் இன்று (03.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக சார்பில் விருப்பமான அளித்த நிர்வாகிகளுக்கு ,எதிர்வரும் ஜன.11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியாற்றிய கண்ணன் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபாசமாகப் பேசி, அதனைத் திரைப்பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் நடப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நடராஜர் பெருமாளுக்கு, வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழக முழுவதும் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் நடராஜர் பெருமானை கண்டு களித்தனர். இந்து சமய அறநிலைத்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுவை மாநிலம் திருபுவனையில் அமைந்துள்ள கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் முலவரான வரதராஜபெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கலியுக வரதராஜபெருமாள் கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் முலவரான மதனகோபால சுவாமிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரங்கநாதர் பெருமாள் கோவில், பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
Sorry, no posts matched your criteria.