India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பூவாத்தாள்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது 15 வயது மகள் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு உடலில் காயங்கள் எதும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மக்களவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மார்ச் 23ம் தேதி பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகள், நடத்தை விதிமுறைகள் அமல் உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் அரசு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, குண்டலிப்புலியூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து கெடார் போலீசார் நேற்று (மார்ச் 20) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தியமூர்த்தி, கணேஷ், கார்த்திக், பாலு, மணிகண்டன் ஆகிய 5 பேர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா இன்று (மார்ச்-21) நடைபெற்றது. ஆலப்பாக்கம், வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தார்.
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சிசிடிவி மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சீரடி சாய்பாபா ஆலயத்தில் பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத ஶ்ரீ கறைகண்டீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 2024 ஏழாம் நாள் உற்சவம் திருத்தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூ திருவிழா மற்றும் அக்னி பால்குட திருவிழாவை முன்னிட்டு கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா தூரி கச்சா இவைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை வகித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பெரம்பலூர் ,திருச்சி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மார்ச்-22 சிறுகனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின்
அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்குகிறார்.
பொதுக் கூட்ட திடலை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.