Tamilnadu

News January 9, 2026

சேலம்: ரயிலில் அடிபட்டு 377 பேர் பலி! அதிர்ச்சி தகவல்

image

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு இடங்களில் ரயிலில் சிக்கி 377 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் சேலத்தில் 132 பேரும், ஜோலார்பேட்டையில் 125 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர். காட்பாடி: 82, ஓசூர்: 20, தர்மபுரி: 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

News January 9, 2026

திருப்பத்தூரில் கோரம்; எமனாய் வந்த லாரி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இன்று (08.01.2026) காலை இருசக்கர வாகனத்தில்சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது, மோதியதில் சக்திவேல் கீழே விழுந்த போது, அவர் மீது லாரி ஏறியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

செங்கல்பட்டு ‌: ரு3000 பொங்கல் பரிசு… புகார் எண் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜன. 8) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. டோக்கன் விநியோகம் முடிந்த நிலையில், ரேஷன் கார்டில் உள்ள யார் வேண்டுமானாலும் கடைக்குச் சென்று பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் புகார்கள் இருப்பின் 044-27426872 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News January 9, 2026

கிருஷ்ணகிரியில் 2 பேர் அதிரடி கைது!

image

கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தில் கடந்த டிசம்பர் 12-ம் அன்று தனியார் நிறுவன பேருந்து மீது பன்றி வெடி வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். இந்த வழக்கில் சக்திவேல், சேகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.8) சேகர், சக்திவேல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 9, 2026

தஞ்சாவூர்: நூதன முறையில் மோசடி – 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் எல்லையில் கறம்பக்குடியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிம் பணம் கொடுத்தால், நகையை அடமானம் வைத்து அசல், வட்டியைத் தருவதாகக் கூறி, போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதை நம்பி பணத்தைக் கொடுத்த சீனிவாசன் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்து அவரளித்த புகாரின் படி, தஞ்சாவூர் மாவட்ட போலீசார் திருநெல்வேலி சேர்ந்த சக்திவிஜய், மகாராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News January 9, 2026

சிவகாசி: தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பாலகங்காதரன் திமுகவில் இணைந்தனர். 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்காதரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2026

POWER CUT: கோவையில் எங்கெல்லாம் மின்தடை

image

கோவையில் இன்று (ஜன.9) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி. கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் பகுதியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News January 9, 2026

காஞ்சியில் காவலர் அணுஅணுவாய் பலி

image

வாலாஜாபாத் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்வம் (51) கடந்த 3-08-25 அன்று கோவில் பாதுகாப்பு பணிக்காக திம்மராஜம்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த ஐந்து மாதமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.8) உயிரிழந்தார்.

News January 9, 2026

மதுரை: 11ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; ஒருவர் கைது

image

மதுரை, பெத்­தா­னியாபுரத்தை சேர்ந்­த­வர் பால­கி­ருஷ்­ணன்(26). இவர் +1 படிக்கும் மாணவியை கோச்­ச­டை­யில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்­டார். இதை அறிந்த திருப்­ப­ரங்குன்­றம் மகளிர் நல அலு­வ­லர் பத்­மா­ அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீ­சார் போக்சோ சட்­டத்தில் வழக்கு பதிவு செய்து பால­கிருஷ்­ணனை நேற்று கைது செய்­த­னர்.

News January 9, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.08) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!