India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

தேனி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று (ஜன.8) ரோந்து பணி மேற்கொண்டனர். ஏர்கோல்பட்டி பகுதியில் சிலர் சூதாடுவதாக வந்த தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த செல்வம் (37), சதீஸ் (27), பாலு (58), குழந்தை கவுண்டர் (51), மாயக்கண்ணன் (48), கோவிந்தன் (60), முருகன் (53) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.35,330 பறிமுதல் செய்தனர்.

மதுரையில் நடைபெறவுள்ள பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள் மற்றும் 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போட்டியின் அளவையும் அதிரடியான முன்னேற்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த ஷாஜகான், சதுப்பேரியில் உள்ள தனது 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக தமிழ் செலவம் என்பவர் மூலமாக வேலூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தடையில்லா சான்று பெற்றுத் தருமாறு கமிஷன் கொடுத்துள்ளார். இதையடுத்து கலெக்டரின் கையெழுத்தை போலியாக தயார் செய்த தியாகராஜன் மற்றும் தமிழ் செலவம் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையிலான கப்பல் சேவை, வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிட்வா புயல் தாக்கத்தால் கடந்த அக்டோபர் 26-ம் தேதி நிறுத்தப்பட்ட கப்பல் சேவை, துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே, சிக்னல் இன்றி சரக்கு வேன் திடீரென நின்றதால் கார் மற்றும் லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது, மற்றொரு கார் பின்னோக்கிச் சென்றதில் கான்கிரீட் லாரி மீது மோதியது. இவ்வாறு மொத்தம் 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் நாளை (ஜன.10) கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் குண்டுகுளம், உத்திரமேரூர் வட்டத்தில் கடல்மங்கலம், வாலாஜாபாத் வட்டத்தில் ஆற்ப்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் 24.01.2026 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரோஹிணி திரையரங்கம் முன்பாக இன்று (ஜன.09) விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமான பேனர்களை வைத்திருந்தனர். ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்காததால் இன்று திரைப்படம் வெளியாகவில்லை. இதனால், திரையரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்தும் வீணானதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.