India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் அதிகபட்சம் ரூ.1000/- வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். விண்ணப்பங்கள் தற்பொழுது கோரிமேட்டில் உள்ள சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன என ஆட்சியர் இரா.பிருந்தாதேவி அறிவிப்பு

கரூர்: கடவூர், வலையபட்டியை சேர்ந்தவர் ரமணா (24). கல்லூரி மாணவரான இவர் நேற்று தனது பைக்கில் சுருமான் பட்டி கிழக்கு பகுதியில் சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர மோட்டார் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. ரமணா தலையில் பலத்த காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார். அவரின் தந்தை கணேசன் புகாரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை!

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜனவரி 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டால் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் சேலம் மண்டல துணை இயக்குநர் அலுவலக மின் அஞ்சல் ddtextilessalemregional@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் சார்பில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு HPV தடுப்பூசிக்கான மாவட்ட பயிலரங்கம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சதீஸ் மற்றும் தேசிய நல குழும இயக்குநர் அருண்தம்புராஜ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். உடன் அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.

தமிழ்நாட்டில் வேலூரில் இருந்து மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..

சென்னையில் போகி பண்டிகையன்று காற்று மாசு ஏற்படுவதைத் தவிர்க்க, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரம் கண்காணிக்கப்படும் என்றும், விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க.

ஜோலார்பேட்டை அருகே கூட்ஸ் செட் ரோடு சேர்ந்தவர் சரசு, அனுமுத்து. இருவரும் திருப்பத்தூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துவிட்டு நேற்று (ஜன.8) இரவு 12 மணியளவில் பணி முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பால்னாங்குப்பம் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் பெண் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.