Tamilnadu

News March 19, 2024

ஓபிஎஸ் உடன் நாமக்கல் பாஜக நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

image

சேலத்தில் இன்று 19ம் தேதி பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். கூட்டத்திற்கிடையே பாஜகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளான லோகேந்திரன், தமிழரசு ஆகியோர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களை நேரில் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

News March 19, 2024

சென்னையில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

image

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யபட்டுள்ளார். வெகுநேரமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவர் வெங்கடேசன், மனைவியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News March 19, 2024

கடலூர்: மணிலா வரத்து அதிகரிப்பு

image

கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மணிலா காய் வரத்து 30.04 மூட்டை, மணிலா வரத்து 110.11 மூட்டை, பச்சை பயிறு வரத்து 0.69 மூட்டை மற்றும் நெல் (வெள்ளை பொன்னி) வரத்து 21.48 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு வரவில்லை.

News March 19, 2024

திருச்சி அருகே உத்தரவு

image

திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்தளத்தில் மருந்தகம் வைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News March 19, 2024

சின்னம் இன்றி நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

image

நாம் தமிழா் கட்சி கரும்பு விவசாயி சின்னம் தற்போது ஐக்கிய பாரதிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளா் பெயர் மற்றும் படத்தை மட்டும் போட்டு வாக்களியுங்கள் என்று தேனி மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனா்.

News March 19, 2024

செய்யாறு அருகே விவசாயி உயிரிழப்பு

image

செய்யாறு அருகே பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்தசாரதி.
இவர் சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பல இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் குணமாகாததால் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

image

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் இன்று (மார்ச் 19) விசாரணைக்கு ஆஜரான ஷாஜகான் என்பவர் நீதிமன்ற மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். படுகாயமடைந்த ஷாஜகான் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 19, 2024

புதுகை: வாக்குவாதத்தால் பிரிந்த உயிர் 

image

மழவராயன்பட்டியை சேர்ந்தவர் குமார் இவருக்கும் இவரது சகோதரர் தங்கராஜூக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News March 19, 2024

தென்காசி அருகே வெறி நாய்களின் தொல்லை 

image

தென்காசி, சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் நடமாடக் கூடிய நகர் பகுதி முழுவதும் வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் மக்களை தெருநாய் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 19, 2024

சிவகங்கை: ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50,000 க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள கலெக்டர் ஆஷா அஜித், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்களை திரும்பப்பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிகொள்ளலாம் எனக் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!