India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் 85, காரைக்காலில் 25 என மொத்தம் 110 சாராய கடைகளுக்கு கலால் துறை சீல் வைத்தனர். இந்நிலையில் சாராயக்கடை நடத்துவதற்கான அனுமதி கடந்த ஜுன் 30 தேதி உடன் முடிந்தது. இதனால் அனைத்து சாராய கடைகளுக்கும் ஏலம் கடந்த 29-ம் தேதி ஆன்லைன் மூலம் விடப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு சாராய கடையும் ஏலம் போகாததால் கலால் துறை அனைத்து கடைகளுக்கும் இன்று சீல் வைத்தனர்.
கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
அறை எண் 110இல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், இரு தரப்பினரையும் அழைத்து தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோத்தகிரி கோடநாடு பகுதியில் மாற்றுத்திறனாளி மக்கள் வசிக்கும் பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவு கலந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம தலைவர் மணிகண்டன் மாவட்ட கலெக்டரிடம் நேற்று நேரில் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி இன்று அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இன்று (03.07.2024) திறந்து வைத்தனர். உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரேணுகா, செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் இருந்தனர்.
சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தின பேரணி புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, தனியார் பள்ளி மாணவர்களின் மாரத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி வரும் 10 ஆம் தேதி காலை டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான வாட்டர் போலோ நீச்சல் போட்டி, சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய, 13 வீராங்கனையர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஈரோடு கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அல்பியாகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கும் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி பங்கேற்கவுள்ளது.
நீலகிரி மக்களவை தொகுதிக்கான பாஜக ஆய்வு கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் (EMS) மகாலில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகிக்கிறார். இதில் நயினார் நாகேந்திரன் MLA பங்கேற்கிறார். இதில் மாநிலம், மாவட்டம், மண்டலம் நிர்வாகிகள் பங்கேற்பதாக மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதால், நாகை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்ட ஆவணங்கள், நினைவு சின்னம், செய்திதாள்கள், அஞ்சல் உறைகள், ரூபாய் தாள், நாணயங்கள் உள்ளிட்டவைகளை நாகை அருங்காட்சியகத்தில் தர வேண்டுமென ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.