India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்கால் மாவட்டத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் ராஜசேகர், மாவட்ட தலைவர் முருகதாஸ், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக சேவியர்தாஸ், பாஜக தேவநாதன், உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்து அதிமுகவினர் கூறுகையில் ”திமுக மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. சிலர் பிரிந்து சென்றாலும் எங்களது கட்சி வாக்குகள் சதவீதம் இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவார் என்றனர்.
மன்னார்குடி நகரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், சோழீஸ்வரர் கோயில், திருப்பாற்கடல் தெரு காசிவிஸ்வநாதர் கோயில் ஆகிய 8 கோயில்களில் இன்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியையும் பெருமானையும் வழிபட்டனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பதினான்கு லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ள நிலையில் அதில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 493 பேர் வாக்களிக்கவில்லை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 79.99,% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் 78.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கீழ்வேளூர் வட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரத்தில் நேற்று பரமேஸ்வரி என்பவரின் கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் சேதமடைந்த வீட்டினை இன்று மாலை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
சென்னையில் இருந்து அழகர் கோவிலுக்கு வந்து, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வினை தரிசித்து விட்டு, மீண்டும் சென்னையை நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் திரும்பி கொண்டிருந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, கருங்காலக்குடி அருகே கம்பூரைச் சேர்ந்தவரின் கார் ஒன்று இந்த காரின் பின்புறமாக மோதியது. இதில் காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் வாக்குகள் மாயமாகி உள்ளது எனக் குற்றம்சாட்டினார். இதற்கு கோவை ஆட்சியர் இன்று விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக கள்ளழகர் இன்று மாலை அழகர் மலையிலிருந்து புறப்பட்டார். கள்ளழகர் திருக்கோலம் ஏற்று தங்க பல்லக்கில் பவனி வரும் கள்ளழகருக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாகம் பொங்க வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று இரவில் அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டகப் பணிகளில் எழுந்தருள உள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 21) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 186 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து ஒரே நாளில் 21 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில்
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட், 40 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.