India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வரை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பழைய குற்றாலத்தில் இரவு 8 மணி வரை குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். விபத்தைத் தவிர்ப்பதாக, பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வனத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை 3) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையின் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசையின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூலை 9ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழையின்றி காணப்படுகிறது.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கினார். இதில், அனைத்து துறையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட முதியோர் நலக் குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது
கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல பெண்களிடம் சிறு, சிறு பணிகளை வழங்கி அவர்களுக்கு பண ஆசையை வரவழைத்து கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளது GMR GROUP என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயலி மூலம் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கோவையில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரியில் 85, காரைக்காலில் 25 என மொத்தம் 110 சாராய கடைகளுக்கு கலால் துறை சீல் வைத்தனர். இந்நிலையில் சாராயக்கடை நடத்துவதற்கான அனுமதி கடந்த ஜுன் 30 தேதி உடன் முடிந்தது. இதனால் அனைத்து சாராய கடைகளுக்கும் ஏலம் கடந்த 29-ம் தேதி ஆன்லைன் மூலம் விடப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு சாராய கடையும் ஏலம் போகாததால் கலால் துறை அனைத்து கடைகளுக்கும் இன்று சீல் வைத்தனர்.
கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
அறை எண் 110இல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், இரு தரப்பினரையும் அழைத்து தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.