Tamilnadu

News April 22, 2024

‘திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’

image

திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது என நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திமுக vs பாஜக vs அதிமுக vs நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவியது.

News April 22, 2024

நாமக்கல் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால்,நாமக்கல் சுற்றுவட்டார கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

News April 22, 2024

கடலூர் அருகே விபத்து; மரணம் 

image

விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (38).நேற்று பெரியவடவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.இப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி வெங்கடேசன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2024

திருச்சி அருகே முன் விரோதத்தில் ஒருவர் அடித்து கொலை

image

லால்குடி அருகே நன்னிமங்கலத்தை சேர்ந்த அருண்ராஜ் (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த தயாளன் (43)  என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளன் அவரது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 22, 2024

கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை – 10 பேர் கைது

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜோஸ்மோன், நண்பர்கள் விஜின், சுஜின் உள்ளிட்டோருடன் மதுக்கரையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே டூவீலர் நிறுத்துவதில் அப்பகுதியை சேர்ந்த தனுஷ் குமாரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜின் அடித்து கொல்லப்பட்டார். இப்புகாரின் பேரில் தனுஷ் குமார், சிறுவன் உட்பட 10 பேர் கும்பலை நேற்று கைது செய்தனர்.

News April 22, 2024

பேருந்தில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

image

பெங்களூர் ஜெபின் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், மனைவி சரஸ்வதி. இவர் நேற்று வடபொன்பரப்பில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வந்திருந்தார். மீண்டும் பெங்களூருக்கு செல்ல நேற்று காலை வடபொன்பரப்பி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது பஸ் வேகமாக சென்றதில் நிலை தடுமாறி சரஸ்வதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2024

மதுரை: சித்திரை திருவிழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

image

மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி வீதியுலாவின் போது ஆயிரக்கணக்கான சிறுமியர் மீனாட்சியம்மன் வேடமணிந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு மீனாட்சியம்மன் வேடமணிவித்து அவரை அம்மன் வீதி உலாவின்போது ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

News April 22, 2024

திருப்பூர்: பழ வியாபாரி குத்திக் கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் வேல் (60). இவர் பொங்கலூர் அருகே உள்ள பொன்நகரில் தனது மகனுடன் வசித்துவருகிறார். இவர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பழங்களை வண்டியில் வைத்து வியாபாரம் செய்துவருகிறார். பழ வியாபாரி வேலை மர்ம நபர்கள் குத்திக்கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 22, 2024

நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பஸ் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தேவையான இடங்களுக்கு சிறப்பு பஸ் ரயிலில் இயக்கப்படுகின்றன. இன்று (ஏப்ரல் 22) மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாளை அதிகாலை 12.45 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News April 22, 2024

விழுப்புரம் அருகே கார் விபத்து: 3 பேர் பலி

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே நேற்று (ஏப்ரல் 21) குறுக்கே பைக் வந்ததால் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது புதுச்சேரி நோக்கிச் சென்ற, ‘எட்டியாஸ்’ கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!