Tamilnadu

News April 24, 2024

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம்-பலமனேரி சாலையை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த தீடீர் போராட்டத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

News April 24, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

ஸ்ரீபெரும்புதூர் : 10 பேர் மீது வழக்கு

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் வாக்குப்பதிவை முழுவதுமாக புறக்கணித்தனர். ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் மக்களை வாக்களிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 10 பேருடன் கிராம மக்கள் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

News April 24, 2024

கோவை: மலையேறும் பக்தர்களுக்கு வேண்டுகோள்

image

வெள்ளியங்கிரி வனதுறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது. மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு அனுமதிப்படுவர் என வனத்துறை கூறியுள்ளது.

News April 24, 2024

கடலூரில் நாளை முகாம்

image

கடலூர், மஞ்சக்குப்பம் சபாபதி செட்டி சாலையில் அமைந்துள்ள யூ.எம்.ஏ குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சென்டரில் இலவச ரத்த பரிசோதனை முகாம் நாளை (23-ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது‌. இதில் கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரை உள்ளிட்ட முழு இரத்த பரிசோதனைகள் பொதுமக்களுக்கு செய்யப்பட உள்ளது. முன்பதிவிற்கு 9003765409 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 24, 2024

புதுகையில் 7 மணி வரை மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை,புதுகை, மதுரை, நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம், குமரி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

ரசாயனம் கலந்த தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சியடிக்க தடை

image

மதுரை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் மீது ரசாயன பொடி, பால், தயிர் கலந்த தண்ணீரை பீச்சியடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இன்று நடந்த சித்திரை திருவிழா ஏற்பாடு குறித்த பொதுநல வழக்கு விசாரணையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள விழா ஏற்பாடு திருப்தி அளிப்பதாக பாராட்டியுள்ள நீதிமன்றம் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்கும் இடத்தில் 2,500 பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

image

மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

நாமக்கல் மருத்துவர் பிஜேபியில் இணைந்தார்

image

பாரதிய ஜனதாக் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன் ராஜேந்திரன் ஆகியோர் ஆன்மீகம் மற்றும் ஆலை மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் ஏற்பாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

News April 24, 2024

தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தேனி, மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, தேனி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!