India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை வடக்கு தெருவை சேர்ந்த விஜி என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென கடைக்குள் பீர் பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக வீசிவிட்டு தப்பி ஓடினர். பீர் பாட்டில் வீசியதால் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் உடைந்து சிதறியது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாடியநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர் கோவிந்தம்மாள் தம்பதியரின் மகன் சிவா (வயது 7). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அருகிலுள்ள மருந்தகத்தில் சிறுவனுக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாகி வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான பகுதிகள் நீரின்றி வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு கோடைகால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் மண்மங்கலம் குமாரசாமி கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 24 மணி நேரமும் கண்காணிக்க, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள “ஸ்ட்ராங் ரூம்” என்னும் அறைக்கு சென்று, முறையாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறதா என ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் கடந்த சில நாட்களை விட வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதுமட்டுமின்றி வெப்ப அலையும், அதிக அளவில் வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இன்று 105 டிகிரி செல்சியஸ் முதல் 109 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்பம் நிலவியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும் போது, ட்ரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் கல்யாண குமார் (19) இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீவிருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அஞ்செட்டியைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த நிலையில் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டியூர், ஓதிபுரம், தக்கட்டி, அர்த்தக்கல் உள்ளிட்ட மலை கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் இணைப்பை பெறமுடியாமல் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்போது செல்போன் டவர்களும் செயல்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோவை பந்தய சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் இன்று கூறியுள்ளதாவது,
வருமான வரி செலுத்துபவர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் ஏப்.24ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். கட்டுபாட்டு அறைக்கு சென்ற அவர் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 17,18,19 என தொடர்ந்து 3 நாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு, 20ம் தேதியான சனிக்கிழமை அன்று கடைகள் திறக்கப்பட்டன. 3 நாள் விடுமுறை அடுத்து கடை திறந்ததால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 20ம் தேதி ஒரே நாளில் ரூ.54 கோடியே 88 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.