Tamilnadu

News April 24, 2024

தூத்துக்குடி: 4 மணி நேரம் காத்திருந்த மக்கள்

image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் முக்கிய விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இவர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

News April 24, 2024

தி.மலை: ஆட்சியர் திடீர் ஆய்வு

image

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அருணாசலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

News April 24, 2024

நாமக்கல்: போக்குவரத்து துறை உத்தரவு

image

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் பகுதியில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால் ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகனங்கள் நிற்பதில்லை என புகார் எழுந்த நிலையில், தற்போது ஆட்டையாம்பட்டி பிரிவில் நிறுத்தி செல்வதற்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

அரியலூர்: கலெக்டர் அதிரடி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல் அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற சுகாதார சீர்கேடு குறித்த தகவல்களை தாங்களாகவே முன்வந்து https://ihip.mohfw.gov.in/cbs/-!. இணையதளத்தில் தெரிவிக்கலாம். இதன் மூலம் சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

News April 24, 2024

பால்குட ஊர்வலத்தில் வாலிபர் கொலை

image

புதுச்சேரி பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி பால் கூட ஊர்வலத்தில் அதே பகுதியைச் சார்ந்த உத்ரேஸ்(28) என்ற வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

News April 24, 2024

விருதுநகரில் டாஸ்மாக் மூடல்!

image

மே 1ஆம் தேதி உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உரைத்த நாள், தொழிலாளர் தினம், பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள், எட்டு மணி நேர வேலை என்று அறிவிக்கப்பட காரணமாக இருந்த நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டார்.

News April 24, 2024

திண்டுக்கல்: கோர விபத்து: பலி

image

ஒட்டன்சத்திரம் அருகே சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மினி லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் தும்மிச்சாம்பட்டி புதூரரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் ஒட்டன்சத்திரம், பழனி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2024

திருச்சி: ஆவேசத்தில் தாயை கொலை செய்த மகன்

image

சோமரசன் பேட்டை லிங்கம்(55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜ குமரன் என்ற மகன் உள்ளார். நேற்று காலையில் பழம் வாங்க சென்று விட்டு, வீடு திரும்பியபோது கொடி மலர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணையில் காதலுக்கு குறுக்கே நின்றதால் மகனே தாயை கொன்றது தெரியவந்ததையடுத்து  போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர்.

News April 24, 2024

ஈரோட்டில் வசூல் வேட்டை ஆரம்பம்

image

ஈரோடு மாநகராட்சியின் 2023-2024 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் நிலுவை வரிகளை கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால், வரி செலுத்த மக்களை கட்டாயப்படுத்தவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவின் காரணமாக தற்போது மாநகராட்சி அலுவலர்கள், வரி பாக்கி வைத்துள்ள வீடுகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News April 24, 2024

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய கலெக்டர்

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், பிஸ்கட், வாழைப்பழம், புளியோதரை, தர்பூசணி பழம், பிரசாத லட்டு மற்றும் பிரசாதம் வழங்கினார்.

error: Content is protected !!