Tamilnadu

News January 11, 2026

பெரம்பலூர்: மாணவர் சடலமாக மீட்பு

image

பெரம்பலூர், செட்டிகுளத்தை சேர்ந்த கிராம உதவியாளர் லிங்கன் என்பவரது மகன் அன்பழகன் (21). கடந்த ஜன.1-ம் தேதி குடும்ப தகராறு காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து 200மீ தூரத்தில் உள்ள கிணற்றின் அருகே அவரது கைப்பேசி மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

News January 11, 2026

சிவகங்கை: போலீஸ் DSP டிரான்ஸ்பர்

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் A.ராஜா மானாமதுரைக்கும், மானாமதுரை DSP T.பார்த்திபன் பல்லடம் சரகத்திற்கும், பணியிட மாற்றம் செய்து DGP வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

News January 11, 2026

சிவகங்கை: போலீஸ் DSP டிரான்ஸ்பர்

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் A.ராஜா மானாமதுரைக்கும், மானாமதுரை DSP T.பார்த்திபன் பல்லடம் சரகத்திற்கும், பணியிட மாற்றம் செய்து DGP வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

News January 11, 2026

மதுரையில் DSP க்கள் பணியிட மாற்றம்…

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 DSP க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி A.சூரகுமரன் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில், M.குருசாமி – உயர் நீதிமன்ற மதுரை கிளை, V.ராமகிருஷ்ணன் – அவனியாபுரம் சரக உதவி ஆணையர்கள், R.பாலசுந்தரம் – ஊமச்சிகுளம் டிஎஸ்பி ஆகியோர் விருதுநகர், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 11, 2026

மதுரையில் DSP க்கள் பணியிட மாற்றம்…

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 DSP க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி A.சூரகுமரன் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில், M.குருசாமி – உயர் நீதிமன்ற மதுரை கிளை, V.ராமகிருஷ்ணன் – அவனியாபுரம் சரக உதவி ஆணையர்கள், R.பாலசுந்தரம் – ஊமச்சிகுளம் டிஎஸ்பி ஆகியோர் விருதுநகர், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 11, 2026

அரக்கோணம்: குளிக்கும் போது மூச்சுத் திணறி பலி!

image

கணபதிபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (45) நேற்று (ஜன.10) தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் குளித்துள்ளார். அப்போது திடீரென மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தக்கோலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 11, 2026

குமரி: டெம்போ மோதி போலீஸ் ஏட்டு பலி..!

image

நாகர்கோவில் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் யூஜின் கிராஸ். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஜன.4 அன்று சாலையில் நடை பயிற்சியில் இருந்தபோது பின்னால் வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யூஜின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.10) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

அரியலூர்: ஆட்சியர் அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டத்தில் போகி பண்டிகையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொளுத்தாமல், மாசு இல்ல போகி கொண்டாட வேண்டும் என ஆட்சியர் ரத்தினசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுவதோடு, கண், மூக்கு, தொண்டை, தோல் எரிச்சல் மற்றும் ஆஸ்துமா மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாசில்லா போகி கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 11, 2026

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு 5 நாள்கள் விடுமுறை

image

ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்தியமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி மஞ்சள் ஏலம் நடைபெறாது. தொடர்ந்து 5 நாள்களுக்கு விடுமுறைக்கு பின் வரும் 19-ம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம் போல நடைபெறும் என்றார்.

News January 11, 2026

கிருஷ்ணகிரி: சாலை விபத்தில் இளம்பெண் பலி!

image

கிருஷ்ணகிரி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 35 வயது பெண் ஒருவர் ஜன.9 ஆம் தேதி மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாலுகா போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!