Tamilnadu

News April 30, 2024

தேனிக்கு இயற்கை அளித்த வரம் மேகமலை!

image

மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.

News April 30, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியர் ஆய்வு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில்
இன்று (30.04.2024) காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்து வருகின்றனர்.

News April 30, 2024

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

மது விற்ற 2 பெண்கள் கைது

image

கடத்தூர் அருகே உள்ள ராமியம்பட்டியில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கோபிநாதம்பட்டி போலீசாருக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் மதுவிற்ற லட்சுமி, மற்றும் கலா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 4,200 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 30, 2024

250 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் உள்ள செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 2023 – 2024ஆம் கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ மாணவிகள் 250 பேருக்கு வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 30, 2024

தென்திருப்பேரை: புறக்கணிக்கும் அரசு பேருந்துகள்

image

திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தென்திருப்பேரை பேருந்து நிறுத்தத்தில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் நிற்காமல் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அரசு துறை சார்ந்த பல அலுவலகங்களுக்கு பயணிகள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

News April 30, 2024

பறவைகளுக்கு குடிநீர்

image

ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இன்று நம்மை சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். என்று பவானி பூங்கா மற்றும் பவானியில் பறவைகள் நிறைந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளையும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 30, 2024

பேருந்து நிலையம் இடமாற்றம்

image

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை, தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதனால், தீவுத்திடலுக்கு தற்காலிகமாக பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

News April 30, 2024

விருதுநகர் ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நான் முதல்வன் திட்டம் மூலம் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்தும் 12ஆம் வகுப்பு முடித்து அனைத்து மாணவர்களையும் 100% உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!