Tamilnadu

News April 30, 2024

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பரப்புரை

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று (ஏப். 30) மூன்றாம் கட்ட தேர்தல் வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார். நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆந்திர மாநிலம் நெல்லூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜூவை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக்களை சந்தித்து தீவிர ஆதரவு திரட்டினார்.

News April 30, 2024

வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

image

தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் கட்டுகளை ஏற்றி சென்ற லாரியில் மின் கம்பி உரசிகதால் திடீரென தீ விபத்து இன்று ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வைக்கோல் மற்றும் லாரி என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 30, 2024

தி.மலையில் இருந்து புதிய பேருந்து வழித்தடம்

image

திருவண்ணாமலை To கம்பம் வரை புதிய பேருந்து வழித்தடம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து வழித்தடம் திருவண்ணாமலையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், தேனி வழியாக காலை 4 மணிக்கு கம்பம் சென்றடையும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

News April 30, 2024

ஈரோடு: மது விற்றால் கடும் நடவடிக்கை

image

தமிழகத்தில் நாளை மே தினத்தை (மே 1))
முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் நாளை அரசு மதுபான கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்படும். மேலும், அன்றைய நாளை மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 30, 2024

பலகோடி மோசடி, நிதி நிறுவன தலைவர் கைது

image

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட் நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த அதன் தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற விஜய்கிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்ட 222 நபர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

News April 30, 2024

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் மாத்திரை இருப்பு, சித்த மருத்துவ பிரிவு, உள்நோயாளி பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்டவற்றை இன்று (ஏப்ரல்-30) செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

News April 30, 2024

தென்காசி: எஸ்பி பாராட்டு

image

தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் எஸ்எஸ்ஐ மனோகரன், மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் எஸ்எஸ்ஐ உமா மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News April 30, 2024

நாமக்கல்லில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

image

ராஜஸ்தான் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பெண்கள் தாலியை குறித்து பேசியதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட மகளிரணி தலைவி மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி நிர்வாகி ராணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்கள் தாலியை பற்றி பேசியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

News April 30, 2024

தேனிக்கு இயற்கை அளித்த வரம் மேகமலை!

image

மேகமலை காடுகள் ஏலக்காய் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்த இடமாகும். சுருளி அருவியின் பிறப்பிடமான மேகமலை, பசுமைமாறா காடுகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், காட்டு எருமைகள், மான்கள், புலிகள் போன்றவையை பார்வையிட ஏற்ற சுற்றுலாத் தலமாகும். மேகமலை புலிகள் சரணாலயம் 1016 சகிமீ பரப்பள கொண்டது. உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகல் காப்பகமும் ஒன்று.

News April 30, 2024

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாவளக்குறிச்சி தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்தில் ஒரு அறை மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவலில் செய்தி வெளிவந்துள்ளது. மேலும் பட்டாசு ஆலையில் விபத்து குறித்து ஆலைகளில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு சிவகாசி வருவாய் வட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!