India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திர பாடி ஊராட்சியில் மதகடி தெரு குளத்தினை இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குளத்தில் நிலத்தடி நீர் மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
மதுரை SDPI கட்சியின் வழக்கறிஞர் சமீர் திருமண நிகழ்விற்கான அழைப்பிதழை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவிடம் நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மணவெளி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த தருணம். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட காந்திகிராமத்தை அடுத்த திண்ணப்பா நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கருப்பண்ணசாமி சப்த கன்னிமார்கள் சுவாமி ஆலயத்தின் 12ஆம் ஆண்டு நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி 05 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கோடைக்காலத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பல்லாவரம் வட்டம் கீழ்கட்டளை ஏரியில் இன்று மாலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நீடாமங்கலத்தில் பத்மஸ்ரீ ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க தீர்மானிக்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கோஜு ரியூ தேசிய அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 95 பேர் கலந்து கொண்டு வெற்றிபெற்றனர். அவர்கள் மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில்வே நிலையம் இன்று வந்தடைந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை சுவரில் வண்ண ஓவியம் வரையும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் நேற்று ஆய்வு செய்தார். ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பணியின் காலம் மற்றும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை பயணத்தை துவங்கியுள்ள பயணியர் ரயிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் உளுந்தூர்பேட்டை வளர்ச்சிக்கு குழு சார்பிலும் மலர் தூவி ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் Dyfi மாநில இணை செயலாளர் செல்வராஜ் உளுந்தூர்பேட்டை வளர்ச்சி ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்பாபு மற்றும் ஹரிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. பின்னர் நேற்று அதிக அளவாக 111.2 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. இந்நிலையில், இன்று 110.48 டிகிரி பாரன் ஹீட் வெயில் பதிவானது. நாளை அக்னி வெயில் தொடங்குவதால் மக்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.