Tamilnadu

News May 4, 2024

திருப்பத்தூர் அழகிய ஃபண்டேரா பூங்கா!

image

ஏலகிரியிலுள்ள ஃபண்டேரா பார்க், பறவைகள் பூங்காவாக செயல்பட்டு வருகிறது. இங்கு 3000க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. இங்கு வரும் பார்வையாளர்கள் பறவைகளுக்கு உணவளிக்கவும், அவைகளைத் தொட்டு பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகின்றன. கூடுதலாக இங்கு பண்ணை அமைத்து கழுதைகள், பசுக்கள், முயல்கள், உடும்புகள், பன்றிகள் போன்ற விலங்குகளை பராமத்து வருகின்றனர். ஒரு பிக்னிக் ஸ்பாட்டாக இருந்து வருகின்றது இப்பூங்கா.

News May 4, 2024

வேளாண் பல்கலையில் கோடைகால சிறப்பு பயிற்சி.

image

கோவை வேளாண் கல்லூரியில் வரும் மே.6, ஜூன்.1 உள்ளிட்ட தேதிகளில் 7 – 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கணினி திறன்களை கற்க கோடைக்கால சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி அரைநாள், முழு நாள் அளவில் நடத்தப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 97899-82772, 94420-78081 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என வேளாண் பல்கலை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News May 4, 2024

நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர்கள் கூறிவருவதால் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதனால் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News May 4, 2024

கோடை மழையால் குஷியில் நீலகிரி

image

வெயில் தாங்காமல் ஊட்டிக்கு வருகிறார்கள் சுற்றுலா பயணிகள். ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியை. தந்தது.
இந்த நிலையில் திடீரென காலநிலை மாற்றம் ஏற்பட்டு வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து, மழை சடசடவென கொட்ட தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்த மழைப்பொழிவு நீடித்தது. குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.

News May 4, 2024

திருவாரூர் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் சிறப்பு!

image

முத்துப்பேட்டையிலுள்ள அலையாத்தி காடுகள், திருவாரூர்- தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினியாறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது. இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள்.

News May 4, 2024

தனியார் வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News May 4, 2024

குமரியில் நாளை 7 இடங்களில் நீட் தேர்வு

image

குமரி மாவட்டத்தில் ஆற்றூர் என்.வி.கே.எஸ் பள்ளி, ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் வின்ஸ் கல்லூரி, ஒழுங்கினசேரி ராஜாஸ் பள்ளி, ஆரல்வாய்மொழி லயோலோ கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. கல்லூரி, பால்குளம் ரோகிணி கல்லூரி ஆகிய 7 கல்வி நிலையங்களில் நாளை(மே 5) நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 5,196 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது.

News May 4, 2024

திருப்பூர்: சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர். கோவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது. காயமடைந்த சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News May 4, 2024

விருதுநகர்:பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 573 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு கடந்த 1.7.23 முதல் தினசரி ஊதியமாக 490 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் விருதுநகர் ஒன்றியத்தில் 23 மஸ்தூர் பணியாளர்களும், மற்ற 10 ஒன்றியங்களில் தலா 20 பணியாளர்கள் என 223 பணியாளர்களுக்கு மட்டுமே தினசரி வேலை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News May 4, 2024

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்

image

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு லண்டனில் இருந்து தினமும் 3:30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வந்துவிட்டு பின் 5:35 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் இன்று(மே 3) காலை 6 மணி நேரம் தாமதமாக, 9:30 மணி அளவில் வந்து சேரும் என்று விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் லண்டன் செல்லவிருந்த 314 பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

error: Content is protected !!