India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோபாலபுரத்தை சேர்ந்த தம்பதி தனசேகரன், யாசின். மகள்கள் ஷாந்தினி, ஷபானா. நேற்று யாசின் நுங்கு வாங்கி வந்ததாக கூறப்படுகிறது அதற்கு தனசேகரன் எதற்கு அதிகமான நுங்கு வாங்கினாய் என கேட்டு யாசினை கத்தியால் தாக்கி உள்ளார். இதனை தடுக்க முயன்ற ஷாந்தினி க்கும் கத்தி குத்து விழுந்தது. இதனை அடுத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்ட திமுக பிரதிநிதி சீனிவாசன் என்பவரின் தந்தையும் தென்கடப்பதாங்கல் ஊராட்சி மன்ற தலைவருமான பிச்சமணி இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியானது. இதில் திருநெல்வேலி மாவட்டம் 93.04% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் நெல்லையில் 25 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 116 பள்ளிகள் 100/100 தேர்ச்சி பெற்று சென்டம் வாங்கி அசத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 94.77 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்கள் அஜய், ராகுல், சந்தியா, மோகித பிரியன் ஆகியோர் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்ட முகம்மது தஸ்தகீர் என்பவரை சோதனையிட்டனர். துபாயில் இருந்து வந்த முகம்மது தஸ்தகீர், பேஸ்ட் வடிவில் 790 கிராம் தங்கத்தை ரூ.56 லட்சம் மதிப்பு) மறைத்து கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது, தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோவை அசோக்நகர் சேர்ந்த சந்தோஷ் கடந்த 2022 ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.22,999 செலுத்தி ஏசி பெற்றார். வாங்கிய சில நாட்களிலேயே ஏசி பழுதானது. ஏசியை அந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி விட்டு பணம் கேட்டு கொடுக்க மறுக்கவே நுகர்வோர் கோர்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் ஏசிக்கான பணம் ரூ.22,999, மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 96.24 மாணவர்கள் தேர்ச்சி பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளது. குலசேகரம் எஸ்.ஆர்.கே.வி மேல்நிலை பள்ளியில் பயின்ற காவல்ஸ்தலம் பகுதியை சேர்ந்த மாணவி தீபிகா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் மாநில அளவில் 2-வது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பவானி நகரில் மிக சிறப்பு வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் பின் பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது . இந்நிலையில் பவானி கூடுதுறை நுழைவு வாயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி பவானி ஆற்றில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
எர்ணாவூர், எரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரசேகர், வளர்மதி தம்பதியரின் மகள் ஸ்வேதா. திருவான்மியூரில் உள்ள தி பெசன்ட் தியாசா பிக்கல் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இவர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 எடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.