Tamilnadu

News June 18, 2024

வே2நியூஸ் செய்தி எதிரொலி: குத்தாலத்தில் மின்கம்பம் அமைப்பு

image

குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சி கடலங்குடி ரெட்டியார் தெருவில் மின்கம்பம் ஒன்று மிகுந்த அளவில் சிதலமடைந்து காணப்பட்டது. இது தொடர்பான செய்தி வே2நியூஸ் ஆப்பில் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியம் மூலம் சிதிலமடைந்த மின்கம்பம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.

News June 18, 2024

குமரி: சி.பி.ஐ.எம் கண்டன ஆர்பாட்டம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர குழு சார்பில் இன்று சி.பி.ஐ.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வந்த தம்பதிகளுக்கு அடைக்கலம் வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை  சூறையாடியதையும், நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News June 18, 2024

வந்தவாசி: 2ஆம் கட்ட தொல்லியல் பணி தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.06.2024) தலைமைச் செயலகத்திலிருந்து வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஆரணி எம்.பி., தரணிவேந்தன் , வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 18, 2024

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய கனிமொழி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவ, மாணவிகளுக்கு எம்.பி. கனிமொழி உதவித்தொகை வழங்கினார். குறிஞ்சி நகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கனிமொழி பாராட்டினார். இதில், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

News June 18, 2024

நெல்லை: நாளை நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு

image

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் நாளை அகத்தியர் மீட்பு குழு சார்பாக அகத்தியர் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் வனப்பாதையை மூடிய வனத்துறையை கண்டித்து என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாக எஸ்டிபிஐ நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் இன்று(ஜூன் 18) தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

விருதுநகர்: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

குமரி: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

தூத்துக்குடி: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

துப்புரவு பணியாளர் மகள் நகராட்சி கமிஷனராக தேர்வு

image

மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தவர் சேகர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மகள் துர்கா தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று நகராட்சி கமிஷனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பணி ஆணையை நேற்று மாநில தேர்வாணையத்துறை இயக்குனர் வழங்கினார். இந்நிலையில் தேர்வு பெற்ற துப்புரவு பணியாளரின் மகளான மாணவியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

News June 18, 2024

நாமக்கல்: கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்கள், இன்று(ஜூன் 18) ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் துறை சார்ந்த அதிகாரியிடம் மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!