Tamilnadu

News May 11, 2024

திண்டுக்கல்: தடை செய்யப்பட்ட நாய்கள் குறித்து ஆய்வு

image

சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் தடை செய்யப்பட்ட 23 ரக நாய்களை யார் வளர்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க வேண்டாம் எனவும், வெளியே அழைத்து வரும்போது வாய்க்கவசம் அணிந்து அழைத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 11, 2024

மதுரை மக்களுக்கு 6 நாள் கொண்டாட்டம்!

image

இன்று (மே 11), உலக அருங்காட்சியக தினம் அன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரையில், காந்தி மியூசியம் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று முதல் மே 16 வரை சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு கிராமிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில், வயது வரம்பின்றி ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என்று, அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

image

ஆலத்தூரிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர், ஆர்ச் கேட் பகுதியைச் சேர்ந்த குமார், சக்திவேல் ஆகியோரின் இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அவர்கள் இருவரும் சேர்ந்து ஜேசிபி மூலம் சுற்றுசுவரை இடித்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட பள்ளியின் தாளாளர் உமாவையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் இருவர் மீதும் நேற்று போலீசார்வழக்குபதிவு செய்தனர்

News May 11, 2024

புதுவையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

image

வில்லியனூர் கணுவாப்பேட்டையில் 3 போ் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது 3 பேரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். விசாரணையில் அவா்கள் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவையில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செயது 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல். செய்தனர்.

News May 11, 2024

டூவீலர்கள் மோதல்.. பழ வியாபாரி பலி

image

பாலக்கோட்டை சேர்ந்த பழ வியாபாரி அயூப்(55) என்பவர் தனது டூவீலரில் இன்று சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த கொட்டா பள்ளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மணிகண்டன் இவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரையும் பாலக்கோடு ஜிஹெச்-சில் சேர்த்தனர். அங்கு அயூப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 11, 2024

அரசு கலைக்கல்லூரியில் மதிப்பீட்டுக் குழுவினர்

image

புதுச்சேரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய தர நிர்ணயம் மற்றும் அங்கீகாரக் குழுவினர் ஆய்வு செய்தனர். கல்லூரியின் பசுமை வனம் ,புத்தர் தோட்டம், வீரமங்கை வேலு நாச்சியார் தோட்டம் முதலான ஆய்வுக்குழுவினர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மதிப்பீட்டுக் குழுவினர் மதிப்பீட்டு அறிக்கையைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். பிற்பகலில் மதிப்பீட்டுக் குழுவினருக்கு விடைதரும்விழா நடந்தது.

News May 11, 2024

சோளிங்கர் அரசு கல்லூரியில் சேர உதவி மையம்

image

சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் முதலாமாண்டு சேர்வதற்கு வசதியாக மே 6 முதல் 20 ஆம் தேதி வரை உதவி மையம் செயல்படுகிறது. சேர விரும்பும் மாணவர்கள் இங்கு நேரில் வந்து விவரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று கல்லூரி முதல்வர் பொறுப்பு சுஜாதா தெரிவித்துள்ளார்.

News May 10, 2024

ராஜமுருகன் சிலை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது

image

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள 56 அடி உயரமுள்ள ராஜமுருகன் சிலையின் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில , பக்தர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் முருகனின் சிலையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளதாக அக்கோயிலின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி- JUSTNOW SALEM

News May 10, 2024

அறுந்து விழுந்த மின் வயரை மிதித்த கணவன்- மனைவி பலி

image

மதுரையில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதில் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டு, பிறகு வந்தது. இந்நிலையில், டிவிஎஸ் நகர், மீனாட்சி ரோடு பகுதியில், இன்று இரவு நடந்து சென்ற கணவன், மனைவி அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயரை மிதித்தனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 10, 2024

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த முன்னாள் அமைச்சர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாய கடனை பெற்றுள்ளனர். இந்த நிலையில் அந்த விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வங்கி நிர்வாகம் அடாவடியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

error: Content is protected !!