Tamilnadu

News April 25, 2025

புதுச்சேரி மக்கள் அறிந்திருக்க வேண்டிய எண்கள்

image

புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் – 1077, குற்றங்கள் தடுப்பு – 1090, மீட்பு மற்றும் நிவாரண உதவி – 1070, பெண்கள் உதவி எண் – 1091, குழந்தைகள் உதவி எண் – 1098, சாலை விபத்து – அவசர உதவி – 1073, அவசர ஊர்தி – 102 மற்றும் 108, தீயணைப்பு உதவி – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியப்படுத்தவும்.

News April 25, 2025

பெரம்பலூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 25, 2025

திருவாரூர்: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 25, 2025

வந்தவாசி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

image

வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சத்யநாராயணன் (38). இவரது திருமணத்தின்போது மனைவி புனிதாவுக்கு அளித்த 5 பவுன் நகையை சத்யநாராயணன் அடகு வைத்துள்ளார். அதனை மீட்டு தருமாறு புனிதா கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சத்யநாராயணன் வீட்டில் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2025

கோர விபத்தல் ஒருவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இன்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது வாகனம் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 25, 2025

ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் நடத்திவர் மீது வழக்கு

image

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப் பகுதியில் (நேற்று ஏப்ரல் 24 மாலை) உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்திய பாங்கு ஷாப்பிங் பகுதியை சேர்ந்த ரமியுல்லா வயது (52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2025

திருச்சி: டிகிரி முடித்தவர்க்ளுக்கு வேலை?

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 25, 2025

செம்மொழி நாளையொட்டி கட்டுரை, பேச்சு போட்டிகள்

image

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வருகிற ஏப். 30- ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது அலைபேசியில் 9626169492 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

News April 25, 2025

தொடர் குற்றச்செயல்- குண்டர் சட்டத்தில் பெண் கைது!

image

சேலம் மாநகரில் பொதுவிநியோகத் திட்ட அரிசிக் கடத்தி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பரிமளா என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. இதையடுத்து அவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!