India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும், மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் நல்ல மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடம் முதல் தளத்தில் இயங்கும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286–291178, 94450-29508 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் நோக்கில் திறனாய்வு தேர்வு அக்டோபர் 11 சனிக்கிழமை அன்று நடைபெறும் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் மற்ற தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்▶️நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04286-299855▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 20வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் ‘பிரேயர் கோப்பை’ யினை சென்னையில் நடத்தியது. இதில் இறுதிப்போட்டியில் ஆரஞ்சு டிராகன்ஸ் மற்றும் கிரீன் இன்வேடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ஆரஞ்சு டிராகன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டிராகன்ஸ் அணியில் நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியின் மாணவி ஶ்ரீநிதி அற்புதமாக விளையாடி சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை பெற்றார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 25 நாட்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு, பால் உற்பத்தி, செம்மறியாடு வளர்ப்பு, ஜப்பானிய காடை, மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 99430-08802 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான வாய்ப்பை SHARE பண்ணுங்க!

பாச்சல், ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தொடக்கி வைத்து, மாணவர்களிடையே உரையாற்றிய ஆட்சியர் கல்வி ஒன்றே கடைசி வரை நம்மை காப்பாற்றும் என்ற ஒரே நோக்கத்துடன் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு முன்வர வேண்டும்” என கூறினார்.

திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான கடைசி தேதி 31-08-2025 ஆகும்.எனவே, சேர்க்கை பெற விரும்பும் மாணவ மாணவியர் 8/10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 79041-11101/82201-10112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டது தொடர் மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5ஆகவே நீடிக்கிறது

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
Sorry, no posts matched your criteria.