Namakkal

News December 11, 2024

நாமக்கல்: பெண்கள் மீதான வன்கொடுமை தடுக்க நடவடிக்கை

image

நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காத அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுப்பதற்காக, அனைத்து நிறுவனங்களும் தனியாக குழு அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். 

News December 11, 2024

நாமக்கல்லில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று (டிச.11) காய்கறி விலை நிலவரம்: கத்தரி ரூ.70, முருங்கை ரூ.150, வெண்டை ரூ.60, தேங்காய் ரூ.52, எலுமிச்சை ரூ.45, சின்னவெங்காயம் ரூ.50, பெரியவெங்காயம் ரூ.70, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.70, உருளை ரூ.50. இதனிடையே நேற்று 10ம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ35க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.7 விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News December 11, 2024

நாமக்கல்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் வேப்ப மரத்தில் இளைஞா் ஒருவா் கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதாக அப் பகுதியினர் ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த மாணவர், புதுச்சத்திரம் காரைக்குறிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஜீவரத்தினம் (17) என்பது தெரியவந்தது.

News December 10, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராஜன் (9498170004), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – கெங்காதரன் (9498136888) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News December 10, 2024

நாமக்கல்: மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

image

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் 8ம் வகுப்பு மாணவி. சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இளைஞர்கள் சிலர் மாணவியை திருவண்ணாமலைக்கு வரவழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

News December 10, 2024

நாமக்கல்லில் 5 1/2 அடி நீளம் அழைப்பிதழ் தயாரிப்பு

image

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் மகாகவி பாரதியார், மூதறிஞர் இராஜாஜி பிறந்தநாள் விழா நாளை நடைபெற உள்ளது. அதற்காக 5 1/2 அடி நீளம் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டது. நாமக்கல் தமிழ் சங்கத் தலைவர் குழந்தைவேல் வெளியிட்டார். கவிஞர் நினைவு இல்ல நூலகர் வாசகர் வட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

News December 10, 2024

‘நாமக்கல்லுக்கு வாங்க ஜனாதிபதி’ – கலெக்டரிடம் விசித்திர மனு

image

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் 76 வது குடியரசு தின விழாவையொட்டி வரும் 2025 ஜனவரி 26 ம் தேதி இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் அவர்கள் நேரில் வந்து செல்லப்பம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கொடி மரத்தில் நமது நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்க வேண்டும் என காந்தியவாதி ரமேஷ் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் நேரில் மனு அளித்துள்ளார்

News December 10, 2024

ராசிபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

image

இராசிபுரம் வட்டத்தில் இன்று தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான, ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம் பின்வரும் ஊர்களில் நடைபெறும். அதன்படி இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என ஆட்சியர் உமா இன்று அறிவித்தார்.

News December 9, 2024

நாமக்கலில் முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 9ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக நீடிக்கிறது.

News December 9, 2024

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!